www.garudabazaar.com

தெறி.. மாரி.. அறம் திரைப்படங்களில் நடித்த 'மாரி' செல்லதுரை திடீர் மரணம்.. நடந்தது என்ன?

முகப்பு > சினிமா செய்திகள்

By |

மாரி, தெறி உள்ளிட்ட படங்களில் நடித்த மூத்த நடிகர் செல்லதுரை அவர்கள் மரணம் அடைந்துள்ளார். 

RIP Actor maari chelladurai who acted in Theri and Aram

தனுஷின் மாரி படத்தில் நடித்ததால், மாரி செல்லதுரை என்று அழைக்கப்படும் செல்லதுரை தமிழ்த் திரைத்துறையில் ஒரு மூத்த நடிகர். நயன்தாரா நடித்த அறம் திரைப்படம் உட்பட பல படங்களில் உணர்ச்சி பூர்வமாக நடித்த செல்லதுரை, ‘அப்படியா விசயம்’ என்று பேசும் வசனம் மீம்ஸ்களுக்கு மத்தியில் பிரபலம். 

இந்நிலையில் நேற்று மாலை பாத்ரூமுக்கு சென்ற இவர் நீண்ட நேரம் ஆகியும் வராததால் கதவை உடைத்துக்கொண்டு பார்த்தபோது, செல்லதுரை இயற்கையாக மரணம் அடைந்தது தெரியவந்தது. அவருக்கு வயது 84. இதனை அடுத்து அவரது இறுதி அஞ்சலி மற்றும் நல்லடக்கம் இன்று மதியம் 2 மணி அளவில் சென்னையில் நடக்கத் தொடங்குகிறது. 

ALSO READ: "இன்னும் எவ்வளவு தாங்குவது இறைவா!".. கே.வி.ஆனந்த் மறைவுக்கு பிரபலங்களின் உருக்கமான இரங்கல்கள்!

தொடர்புடைய இணைப்புகள்

RIP Actor maari chelladurai who acted in Theri and Aram

People looking for online information on Maari Chelladurai, RIP will find this news story useful.