www.garudabazaar.com

BiggBoss-க்கு அப்றம் நிறைய நடந்துருச்சு.. காதலர் தினத்தில் Rakhi Sawant விவாகரத்து.. ரசிகர்கள் ஷாக்!

முகப்பு > சினிமா செய்திகள்

By |

Rakhi Sawant Ritesh Separation, 14, பிப்ரவரி 2022: காதலர் தினம் அதுவுமாக, பிரபல நடிகை ராக்கி சாவந்த் அறிவித்துள்ள விவாகரத்து முடிவு அவரது ரசிகர்களிடையே பேரதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Rakhi Sawant Separation from Husband Ritesh After Bigg Boss 15

நடிகை ராக்கி சாவந்த்

பிரபல ஹிந்தி நடிகை ராக்கி சாவந்த்,  பாலிவுட் சினிமாவில் பிரபலமான நடிகையாக திகழ்பவர். இந்தி, கன்னடம், மராத்தி, தெலுங்கு, தமிழ் என பல மொழி படங்களிலும் நடித்த இவர், தமிழில் என் சகியே, முத்திரை, கம்பீரம் ஆகிய சில படங்களில் ஒரு பாடலுக்கு நடனமாடியிருக்கிறார்.

Also Read: அரபிக் குத்து.. ரிலீஸ் ஆனதும் மில்லியன் வியூவ்ஸை கடந்த பீஸ்ட் முதல் சிங்கிள் லிரிக் வீடியோ..

Bigg Boss 15

அண்மையில் இந்தி பிக் பாஸ் நிகழ்ச்சியின் சீசன் 15-ல் கலந்து கொண்ட இவர் குறித்து பல சர்ச்சை பேச்சுகள் உருவாகி பேசப்பட்டு வந்தன. இந்நிலையில் தனது கணவரை பிரிந்து விட்டதாக நடிகை ராக்கி சாவந்த் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். அவரின் இந்த பதிவு தற்போது சோஷியல் மீடியாவில் அதிர்வலையை உண்டு பண்ணி வருகிறது.

காதலர் தினத்தி விவாகரத்து முடிவு

Rakhi Sawant Separation from Husband Ritesh After Bigg Boss 15

இது தொடர்பாக அப்பதிவில் அவர், “காதலர் தினத்திற்கு முன்பே இது நடந்திருக்க வேண்டும். இப்படி ஒரு நாளில் இந்த முடிவெடுத்ததில், நான் வருந்துகிறேன். மனம் உடைந்துவிட்டது. ரித்தேஷ் தம் வாழ்க்கையில் சிறந்து விளங்க என் வாழ்த்துக்கள். எனது அடுத்த் வேலை, வாழ்க்கையில் நான் கவனம் செலுத்த வேண்டும். புரிந்துகொண்டு ஆதரவளித்ததற்கு எப்போதும் நன்றி” என தெரிவித்துள்ளார்.

பிக்பாஸ் நிகழ்ச்சிக்குப் பிறகு பல விஷயங்கள் நடந்தது..

Rakhi Sawant Separation from Husband Ritesh After Bigg Boss 15

காதலர் தினத்தில் இப்படி தனது விவாகரத்தை அறிவித்துள்ள நடிகை ராக்கி சாவந்த், தன் அன்புள்ள நண்பர்களுக்கும் நலம் விரும்பிகளுக்கும், தன் இந்த பிரிவு முடிவு மனமொத்து நடந்ததாகவும், பிக்பாஸ் நிகழ்ச்சிக்குப் பிறகு பல விஷயங்கள் நடந்ததாகவும்,  அதில் பல தமக்கே தெரியாது என்றும், இந்த கருத்து வேறுபாடுகளைக் கையாள முயற்சித்தும், முடியாததால், இணக்கமாக இருவரும் பிரிந்து செல்வதாகவும் தெரிவித்துள்ளார்.

இப்படி ஒரு கணவர் கிடைத்ததற்காக கடவுளுக்கு நன்றி

ராக்கி சாவந்த் திருமணம் செய்துகொண்ட, அவரது கணவர் ரித்தேஷ் அடிப்படையில் தொழிலதிபர். அந்த திருமணத்துக்கு சில நாட்கள் கழித்து தான் தனக்கு திருமணம் ஆகிவிட்டது என அவர் உறுதி செய்தார்.  மேலும் தனது கணவர் பெயர் ரிதேஷ் என்றும் அவர் லண்டனில் வசிக்கிறார் என்றும் ராக்கி சாவந்த் தெரிவித்திருந்தார். குறிப்பாக, தனக்கு அற்புதமான கணவர் கிடைத்ததற்காக கடவுளுக்கு நன்றியும் அப்போது கூறியிருந்தார்.

Rakhi Sawant Separation from Husband Ritesh After Bigg Boss 15

இந்தி ‘பிக்பாஸ்’ நிகழ்ச்சியின்போது, கணவர் ரிதேஷை அழைத்து வந்து ராக்கி சாவந்த் அறிமுகப்படுத்தியிருந்தார் என்பதும், ரிதேஷ், ஏற்கனவே திருமணம் ஆனவர் என்பதுடன், அவர் மீது அவரது முதல் மனைவி பல்வேறு குற்றச்சாட்டுகளை சுமத்தியிருந்தார் என்பதும் குறிப்பிடத்தக்கது.  இந்த நிலையில், கணவரை பிரிய முடிவு செய்து, காதலர் தினத்தில்  ராக்கி சாவந்த் எடுத்த இந்த முடிவு அவருக்கு மட்டுமல்லாமல் அவரது ரசிகர்களுக்கும் வருத்தத்தையும் அதிர்ச்சியையும் தந்திருக்கிறது.

Also Read: அசத்தல்.. ஆரவாரம்.. பிரபல சீரியலின் மூலம் சின்னத்திரைக்கு எண்ட்ரி கொடுக்கும் குஷ்பு!

மேலும் செய்திகள்

Rakhi Sawant Separation from Husband Ritesh After Bigg Boss 15

People looking for online information on Bigg Boss 15, Rakhi Sawant, Rakhi Sawant Separation, Ritesh will find this news story useful.