www.garudabazaar.com

நம்ம ராஜா ராணி-2 சந்தியா ஐபிஎஸ் ஆகிட்டாங்களா? .. அவரே பதிவிட்ட படப்பிடிப்பு ஃபோட்டோஸ்!

முகப்பு > சினிமா செய்திகள்

By |

தமிழ் சீரியல்களில் மிகவும் விரும்பத்தக்க இளம் நடிகைகளுள் ஒருவர் ஆல்யா மனசா.

rajarani2 serial sandhya latest change over viral shooting pic

விஜய் டிவியில் ஒளிபரப்பான ராஜா ராணி சீரியல் மூலம் பிரபலமான இவர், தற்போது ராஜா ராணி 2-ஆம் பாக சீரியலில், கதாநாயகி கதாபாத்திரமான சந்தியாவாக நடிக்கிறார்.

இயக்குநர் பிரவீன் பென்னட் இயக்கி வரும் இந்த சீரியலில், ஆல்யா மற்றும் சித்து ஆகியோர் முறையே நாயகி, நாயகனாக நடிக்கின்றனர். இந்த சீரியலில் சந்தியா படித்தவர் என்பதால், அவரது மாமியார் சந்தியாவிடம் பொறுப்பும் தன்னடக்கமும் இருக்காது என சந்தேகித்து சில பரீட்சைகளை வைத்தார்.

இதையெல்லாம் கடந்து, தற்போது நகை காணாமல் போன விவகாரத்தில் தன் மீது சந்தேகப்படும் மாமியாருக்கு, தான் குற்றமற்றவள் என சந்தியா நிரூபிக்கும் காட்சிகள் போய்க் கொண்டிருக்கின்றன. சந்தியாவோ, படித்த மற்றும் துணிச்சலான பெண். அவரது கனவே 'ஐபிஎஸ்' ஆக வேண்டும் என்பதுதான். ஆனால் அவர் படித்த மணமகள் என்பதையே ஏற்றுக்கொள்ள முடியாத சந்தியாவின் மாமியார், சந்தியாவின் 'ஐபிஎஸ்' கனவுக்கெல்லாம் பச்சைக்கொடி காட்டுவாரா என்பது குதிரை கொம்பு தான்.

இதனிடையே சந்தியா, 'ஐபிஎஸ்' உடையில் தோற்றமளிக்கும் காட்சிகள் ஷூட்டிங் செட்டில் படமாக்கப்பட்டுள்ளன. இந்த புகைப்படங்களை பதிவிட்டுள்ளார் ஆல்யா மானசா. இந்த காட்சிகள் அடுத்தடுத்த எபிசோடுகளில் வரவிருப்பதாக தெரிகிறது. இந்த புகைப்படங்களை ரசிகர்கள் பகிர்ந்து, “என்னது..? சந்தியா ஐபிஎஸ் ஆகிவிட்டாரா?” என, ஆர்வம் தாளாமல் கேள்வி எழுப்பிவருகின்றனர்.

ALSO READ: 'பாரதி கண்ணம்மா'வில், ‘மறைந்த’ நடிகர் வெங்கட் கேரக்டரில் ‘புதிய நடிகர்!’ .. யார் தெரியுமா?..  அவருக்கும் வெங்கட்-க்கும் இப்படி ஒரு கனெக்‌ஷனா?

தொடர்புடைய இணைப்புகள்

rajarani2 serial sandhya latest change over viral shooting pic

People looking for online information on Alyamanasa, Rajarani, RajaRani2, Trending, VijayTelevision, Vijaytv will find this news story useful.