www.garudabazaar.com

பிரபல சீரியல் நடிகைக்கு திடீரென ஏற்பட்ட மூளை பக்கவாதம்... அவசரமாக மருத்துவமனையில் அனுமதி..!

முகப்பு > சினிமா செய்திகள்

By |

பிரபல பாலிவுட் நடிகர் சுரேகா சிக்ரிக்கு செவ்வாய்க்கிழமை பக்கவாதம் ஏற்பட்டு, மும்பை ஜூஹுவில் உள்ள கிரிடிகர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். மூன்று முறை தேசிய விருது பெற்ற 75 வயதான நடிகை  தற்போது தீவிர சிகிச்சை பிரிவில் உள்ளார், ஏனெனில் கடந்த இரண்டு ஆண்டுகளில் அவர் அனுபவித்த இரண்டாவது பக்கவாதம் இது. இவர் தமிழில் மொழிபெயர்க்கப்பட்ட பல சீரியல்களில் நடித்துள்ளதால் பலருக்கும் பரிட்சியமானவர்.

பிரபல சீரியல் நடிகைக்கு திடீரென ஏற்பட்ட மூளை பக்கவாதம் | Popular serial actress suffers from brain stroke

அவர் நிலையாக இருப்பதாகவும், செவ்வாய் பிற்பகல் முதல் மருத்துவர்கள் அவரை பரிசோதித்து வருகின்றனர் என்றும் கூறப்படுகிறது. கடந்த 2018 நவம்பரில் தனது கடைசி படமான பதாய் ஹோ வெளியான பிறகு சிக்ரிக்கு மூளைச்முடக்கம் ஏற்பட்டதாக கூறப்படுகிறது.

அவர் குணமடைந்து விட்டாலும், 24 மணி நேரமும் கவனித்துக் கொள்ள ஒரு நர்ஸ் நியமிக்கப்பட்டுள்ளார்.செவ்வாய்க்கிழமை காலை,  பழச்சாறு அருந்தியபோது அவருக்கு பக்கவாதம் ஏற்பட்டதையடுத்து அவர் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார். இதனையடுத்து அவர் மீண்டு வர அவரது ரசிகர்கள் வேண்டுதல் செயது வருகின்றனர்.

பிரபல சீரியல் நடிகைக்கு திடீரென ஏற்பட்ட மூளை பக்கவாதம் | Popular serial actress suffers from brain stroke

People looking for online information on Brain stroke, Serial, Surekha Sikri will find this news story useful.