பிரபல நடிகரின் ரசிகர்களால் நடிகைக்கு ஏற்பட்ட மோசமான சம்பவம்... மனமுடைந்த நடிகை போட்ட பதிவு..!

முகப்பு > சினிமா செய்திகள்

By |

தெலுங்கு சினிமாவில் முன்னணி நடிகர்களாக இருப்பவர்கள் நடிகர் மகேஷ்பாபு மற்றும் ஜூனியர் என்டிஆர். இருவருக்கும் தனித்தனியே ரசிகர் பட்டாளம் இருக்கிறது. தமிழில் அன்பே ஆருயிரே இசை, மருதமலை, லீ காளை போன்ற படங்களில் நடித்தவர் நடிகை மீரா சோப்ரா.

பிரபல நடிகரின் ரசிகர்களால் நடிகைக்கு மோசமான சம்பவம் Popular actress meera chopra face threats from popular actor fans

இவர் சமீபத்தில் ரசிகர் ஒருவர் ஜூனியர் என்டிஆர் பற்றி கேட்ட கேள்விக்கு பதில் அளித்திருந்தார். இதனையடுத்து ஜூனியர் என்டிஆரின் ரசிகர்கள் அவரை மோசமான வார்த்தையினால் பேச ஆரம்பித்துவிட்டனர். மனமுடைந்த அவர் தனது ட்விட்டர் தளத்தில் பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார்.

அவர் கூறும்போது ஜூனியர் என்டிஆர் ஐ டேக் செய்து "உங்களைவிட மகேஷ்பாபு அதிகம் பிடிக்கும் என்று கூறியதற்காக (சில மோசமான வார்த்தைகளை பதிவிட்டு) இப்படி எல்லாம் அழைக்கப்படுவேன் என்று நினைக்கவில்லை. உங்களது ரசிகர்களால் எனது பெற்றோருக்கு இப்படிப்பட்ட வாழ்த்துக்கள் கிடைக்கும் என்றும் நினைக்கவில்லை.

இப்படிப்பட்ட ரசிகர்களை வைத்து இருப்பது வெற்றி என்று நினைக்கிறீர்களா?எனது பதிவிற்கு பதில் சொல்வீர்கள் என்று நினைக்கிறேன்"என்று கூறியுள்ளார். இதனையடுத்து பாடகி சின்மயி அப்படி மோசமாக பேசுபவர்கள் மேல் வழக்கு பதிவு செய்யுங்கள் என்று ஆதரவு தெரிவித்துள்ளார்.

பிரபல நடிகரின் ரசிகர்களால் நடிகைக்கு மோசமான சம்பவம் Popular actress meera chopra face threats from popular actor fans

People looking for online information on Junior NTR, Mahesh Babu, Meera chopra will find this news story useful.