www.garudabazaar.com

நான் வெளில 'போகாததுக்கு' இதுதான் காரணமாம்... 'உண்மையை' சொன்ன ஷிவானி!

முகப்பு > சினிமா செய்திகள்

By |

நேற்று முன்தினம் பிக்பாஸ் வீட்டுக்குள் வந்த ஷிவானியின் அம்மா அவரை காய்ச்சி எடுத்து விட்டார். கடைசியில் அவர் ஆறுதலாக பேசினாலும் கூட அவரின் கோபம் ஷிவானியை அதிகமாக பாதித்து விட்டது போல. அமைதியாக பிக்பாஸ் வீட்டுக்குள் வளைய வந்து கொண்டிருக்கிறார். இதைப்பார்த்த நெட்டிசன்கள் ஷிவானி ரொம்ப டிஸ்டர்ப்பா இருக்காங்க என கருத்து தெரிவித்து வருகின்றனர்.

Netizens liked Shivani and Ramya Pandian's conversation

நேற்று பிக்பாஸ் முடியப்போகும் தருணத்தில் ஆஜீத், ஷிவானி இருவரும் சேர்ந்து பாட்டுப்பாடி, ஆடினர். அப்போது தான் பழைய ஷிவானியை கொஞ்சம் பார்க்க முடிந்தது. இந்த நிலையில் ரம்யாவின் வீட்டினர் சென்ற பிறகு அவரும், ரம்யாவும் வீட்டின் வெளியே அமர்ந்து பேசிக்கொண்டு இருந்தனர். அப்போது தன்னுடைய தம்பி எவிக்ஷன் குறித்து பேசியதை ரம்யா சொன்னார்.

பதிலுக்கு ஷிவானி அப்படி பார்த்தா நான் தான் வெளிய போகணும். நேத்து எங்க அம்மா கிட்ட நான் தான் வாராவாரம் சேவ் ஆகறேன்னு ஒரு பேச்சுக்கு சொன்னேன். அவங்க உடனே போக வேண்டியவங்க நெறைய இருக்காங்க. அதனால தான் நீ உள்ள இருக்கேன்னு சொல்லிட்டாங்க. என வருத்தத்துடன் கூறினார். இதைப்பார்த்த ரசிகர்கள் இதெல்லாம் கட் பண்ணிட்டீங்க? ஏன் பிக்பாஸ் என கேள்வி கேட்டு வருகின்றனர்.

தொடர்புடைய இணைப்புகள்

Netizens liked Shivani and Ramya Pandian's conversation

People looking for online information on Bigg Boss 4 Tamil will find this news story useful.