Annatha Others ua
www.garudabazaar.com

"இந்த 2 பேர்ல ஒருத்தர் வின்னர்!".. "தாமரையோட என்ன பிரச்சனை?".. மனம் திறந்த நமீதா மாரிமுத்து!

முகப்பு > சினிமா செய்திகள்

By |

பிக்பாஸ் நிகழ்ச்சியில் ஐந்தாவது சீசன் விஜய் டிவியில் விறுவிறுப்பாக சென்று கொண்டிருக்கிறது தொடக்கத்தில் 18 போட்டியாளர்களுடன் பிக்பாஸ் நிகழ்ச்சி தொடங்கியது.

Namitha Marimuthu opens up viral question and answers session

நமீதா மாரிமுத்து இந்த நிகழ்ச்சியில் இணைந்த முதல் திருநங்கை போட்டியாளராக அறிமுகமானார். இந்நிகழ்ச்சியில் கலந்துகொண்ட நமீதா மாரிமுத்து இந்த பாலுணர்வு மாற்றத்தால் தான் எதிர்கொண்ட சமூக சிக்கல்கள் தொடங்கி சமூக அமைப்புக்குள் இருந்து கோர்ட் வரை சென்று தன் சுய வாழ்க்கையை தேர்ந்தெடுப்பதற்கு தீர்வு கண்டது வரை அனைத்தையும் பிக்பாஸ் நிகழ்ச்சியில் கதை சொல்லும் டாஸ்க்கில் கூறியிருந்தார்.

தொடர்ந்து அவர் சில நாட்கள் பிக்பாஸ் வீட்டில் இருந்துவந்த நிலையில் கடைசியாக அவருக்கு தாமரையுடன் ஒரு உரசல் ஏற்பட்டது. அதே நாளில் தாமரையுடன் சென்று நமீதா மாரிமுத்து சமாதானமாக பேசிய காட்சிகளும் அரங்கேறின. இதனைத் தொடர்ந்து அடுத்த நாள் தவிர்க்க முடியாத காரணங்களால் நமீதா மாரிமுத்து பிக்பாஸ் வீட்டை விட்டு வெளியேறியதாக பிக்பாஸ் அதிகாரப்பூர்வமாக அறிவித்திருந்தார்.

அதன் பிறகு அடுத்தடுத்து நாடியா, அபிஷேக், சின்னபொண்ணு மூவரும் வெளியேறினர். அபிஷேக் வெளியேறிய பின், பிஹைண்ட்வுட்ஸ்க்கு அளித்த பிரத்தியேகப் பேட்டியில் பேசும்போது, “நமீதா மாரிமுத்துவை ஒரு சாந்தமான பெண் தெய்வமாகவும், நாக்கை துருத்தி, கிட்டத்திட்ட ரௌத்திரமான பெண் கடவுளாகவும் பார்த்திருக்கிறேன். ஒருநாள் எங்கள் அனைவரையும் உட்கார வைத்து, அன்று அவர் நடந்துகொண்ட பிஹேவியருக்கு அவரே விளக்கம் சொல்லுவார் என்று எதிர்பார்க்கிறேன்!” என்று குறிப்பிட்டிருந்தார்.

இந்த நிலையில் நமீதா மாரிமுத்து தம்முடைய ரசிகர்களிடம் சோசியல் மீடியாவில் கேள்வி பதில் அமர்வை நடத்தியிருக்கிறார். இதில் அவர் குறிப்பிட்டிருக்கும் பல்வேறு பதில்கள் வைரலாகி வருகின்றன. அந்த வகையில், “மீண்டும் பிக்பாஸ் வீட்டுக்குள் வைல்ட் கார்ட் என்ட்ரியில் போவீறீர்களா?” என்று ரசிகர்கள் கேட்டதற்கு, “போகலாம் போகாமலும் இருக்கலாம் பார்க்கலாம்” என்று பதிலளித்திருக்கிறார் ‌

இதேபோல், “இந்த சீசனில் பிக்பாஸ் வின்னராக யார் இருப்பார்கள்.. சொல்லுங்க அக்கா?” என்று ரசிகர் ஒருவர் கேட்டதற்கு, பதிலளித்த நமீதா மாரிமுத்து, “சிபி சந்திரன் அல்லது இசைவாணி இருவரில் யாராவது ஒருவர்!” என்பது போல் அவர்கள் பெயரை குறிப்பிட்டு பதிலளித்திருக்கிறார்.  தொடர்ந்து, “இந்த சீசன் டைட்டிலை நீங்கள் வெற்றி பெறுவீர்கள் என்று நினைத்தோம்.. உங்களை மிஸ் பண்ணுகிறோம்” என்று ரசிகர்கள் குறிப்பிட்டதற்கு, “நான் உங்கள் அனைவரின் அன்பை வென்று இருக்கிறேன்.. அதை விவரிப்பதற்கு வார்த்தைகளே இல்லை!” என்று நமீதா மாரிமுத்து குறிப்பிட்டிருக்கிறார்.

குறிப்பாக தாமரை பற்றி ரசிகர்கள் கேட்டதற்கு, “அவர் ஒரு நல்ல மனுஷி தான்.. ஆனால் அவருக்கு மக்களைக் கவர்ந்து அவர்களிடையே தன் இருப்பிடத்தை தக்கவைத்துக் கொள்ளும் கேம் ஸ்பிரிட் இல்லை. இது என்னுடைய கருத்து தான்!” என்று குறிப்பிட்ட நமீதா மாரிமுத்து, “உண்மையில் தாமரை வெள்ளந்தியா என்பது குறித்து எனக்கு தெரியாது.. ஆனால் நிதர்சனத்தை சொல்ல வேண்டுமென்றால், இந்த விளையாட்டுக்கு விளையாடுவதற்கு அவர் வலுவானவர் இல்லை!” என்று குறிப்பிட்டிருக்கிறார்.  

Namitha Marimuthu opens up viral question and answers session

அதே சமயம், “எனக்கும் தாமரைக்கும் எந்த சிக்கலும் இல்லை. சொல்லப்போனால் என் குடும்ப நிகழ்ச்சிகளில் அவரை பெர்ஃபார்ம் பண்ண வைக்கவும் திட்டமிட்டிருக்கிறேன்” என்றும் நமீதா மாரிமுத்து தெரிவித்துள்ளார். 

"இந்த 2 பேர்ல ஒருத்தர் வின்னர்!".. "தாமரையோட என்ன பிரச்சனை?".. மனம் திறந்த நமீதா மாரிமுத்து! வீடியோ

மேலும் செய்திகள்

Namitha Marimuthu opens up viral question and answers session

People looking for online information on BiggBossTamil5 Namitha, Namitha Marimuthu will find this news story useful.