www.garudabazaar.com

சிரஞ்சீவி பற்றி தப்பா பேசிய பிரபல இயக்குனர்... மன்னிப்பு கேட்க வைத்த நடிகை மேக்னா..!

முகப்பு > சினிமா செய்திகள்

By |

இளம் நடிகர் சிரஞ்சீவி சார்ஜாவின் மரணத்தில் இருந்து இன்னமும் அவரது குடும்பம் மீளவில்லை என்று தெரிகிறது. இந்நிலையில் இயக்குனர் இந்திரஜித் லங்கேஷ் கன்னட திரையுலகில் பலர் போதை பொருளுக்கு அடிமையாகி இருப்பதாக பரபரப்பு புகார் ஒன்றை முன்வைத்தார்.

மேக்னாவிடம் மன்னிப்பு கேட்ட இயக்குனர்| Meghna indulge Director to ask sorry on chiranjeevi issue

மேலும் அதில் அவர்களின் பெயர் பட்டியலை குறிப்பிட்ட அவர், சிரஞ்சீவியின் மரணத்தில் மர்மம் இருப்பதாகவும் ஏன் அவரது உடலை பிரேத பரிசோதனை செய்யவில்லை என்றும் கூறினார் என கூறி சர்ச்சையை ஏற்படுத்தினார்.

இந்த சர்ச்சை கருத்தால் ஆத்திரமடைந்த நடிகை மேக்னா இயக்குனர் இந்திரஜித் மன்னிப்பு கேட்க வேண்டும் என்று வலியுறுத்தினார்.  இந்நிலையில் இந்த விவகாரத்தில் இயக்குனர் இந்திரஜித் மன்னிப்பு அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார்.

அதில் "சிரஞ்சீவிக்கு எதிரான அறிக்கைகளை நான் ஏற்கனவே வாபஸ் பெற்று உள்ளேன். மேலும் சிரஞ்சீவி போதைப்பொருள் மோசடியில் ஈடுபட்டதாக நான் கூறவில்லை. அவரது மரணத்தில் இருக்கும் மர்மத்தை உடைக்க வேண்டும் என்று தான் கூறினேன். ஏனெனில் அவரது தந்தை அவரது மரணத்திற்கான உண்மை காரணத்தை அறிய வில்லை. மேக்னா மற்றும் அவரது குடும்பத்தினரை காயப்படுத்தி இருந்தால், பகிரங்க மன்னிப்பு கேட்க தயார் என்று கூறியுள்ளார். இந்த சம்பவம மிகுந்த பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

தொடர்புடைய செய்திகள்

மேக்னாவிடம் மன்னிப்பு கேட்ட இயக்குனர்| Meghna indulge Director to ask sorry on chiranjeevi issue

People looking for online information on Chiranjeevi Sarja, Indrajit Lankesh, Meghna will find this news story useful.