www.garudabazaar.com

தனது மகனுடன் சுஹாசினி மணிரத்னம்.. லண்டனில் இருந்து வெளியிட்ட லேட்டஸ்ட் ஃபோட்டோஸ்!

முகப்பு > சினிமா செய்திகள்

By |

இந்திய சினிமாவில் முன்னணி இயக்குனராக அறியப்படுபவர் இயக்குனர் மணிரத்னம்.

Maniratnam Suhasini Son Nandan Latest Photo in London

Also Read | யோகாசனம் செய்யும் நடிகை கீர்த்தி சுரேஷ்.. அவரே சொன்ன செம்ம காரணம்! வைரல் வீடியோ

சமீபத்தில் அமரர் கல்கியின் புகழ் பெற்ற “பொன்னியின் செல்வன்” நாவலை அடிப்படையாகக் கொண்டு, மணிரத்னம் பொன்னியின் செல்வன் திரைப்படத்தை இரண்டு பாகங்களாக இயக்கி உள்ளார்.

இதன் முதல் பாகமான "பொன்னியின் செல்வன் - 1", கடந்த (30.09.2022) உலகம் முழுவதும் வெளியானது.

இந்த படம் தமிழகம் முழுவதும் 200+ கோடி ரூபாயை வசூலித்து  சாதனை படைத்தது. உலகம் முழுவதும் சுமார் 500 கோடி ரூபாயை வசூலித்து சாதனை படைத்துள்ளது என படக்குழுவினர் அறிவித்துள்ளனர்.

Maniratnam Suhasini Son Nandan Latest Photo in London

இப்படத்தில் ஆதித்த கரிகாலன் கதாபாத்திரத்தில் நடிகர் விக்ரமும், வந்தியத்தேவனாக நடிகர் கார்த்தியும், அருண் மொழிவர்மனாக ஜெயம் ரவியும் நடித்தனர். மேலும்   நந்தினியாக ஐஸ்வர்யா ராயும், குந்தவையாக த்ரிஷாவும், பெரிய பழுவேட்டரையர் மற்றும் சின்ன பழுவேட்டரையர் வேடத்தில் முறையே சரத்குமார் மற்றும் பார்த்திபன் நடித்துள்ளனர்.  சமுத்திரகுமாரி பூங்குழலி கதாபாத்திரத்தில் ஐஸ்வர்யா லெஷ்மியும், வானதி கதாபாத்திரத்தில் நடிகை சோபிதா துலிபாலாவும் நடித்தனர்.

இப்படத்தில் பாண்டிய ஆபத்துதவிகள் பாத்திரத்தில், ரவி தாசன் கதாபாத்திரத்தில் கிஷோர் நடித்துள்ளார். ரியாஸ் கான், சோமன் சாம்பவன் கதாபாத்திரத்திலும், தேவராளன் கதாபாத்திரத்தில் வினயும், அர்ஜூன் சிதம்பரம், வராகுணன் கதாபாத்திரத்திலும் நடித்தனர்.

Maniratnam Suhasini Son Nandan Latest Photo in London

பொன்னியின் செல்வன் -2 படத்தினை அடுத்து இயக்குனர் மணிரத்னம், நடிகர் கமல்ஹாசன் நடிப்பில் புதிய படத்தை இயக்க உள்ளார்.

நடிகர் கமல்ஹாசன் நடிக்கும் 234வது திரைப்படமாக இந்த படம் உருவாக உள்ளது. 35 வருடங்களுக்கு பிறகு மணிரத்னம் இயக்கத்தில் கமல்ஹாசன் நடிக்க உள்ளார் என வந்த அந்த அறிவிப்பு ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றது.

மேலும் இந்த படத்தினை கமல்ஹாசனின் ராஜ் கமல் நிறுவனம் & மணிரத்னத்தின் மெட்ராஸ் டாக்கீஸ் நிறுவனம் & உதயநிதி ஸ்டாலினின் ரெட் ஜெயன்ட் மூவிஸ் நிறுவனம் இணைந்து தயாரிக்கும் எனவும் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த தயாரிப்பாளர்கள் குழுவில் RKFI மகேந்திரன் & மெட்ராஸ் டாக்கீஸ் சிவா ஆனந்த் பெயர்களும் இடம் பெற்றுள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.

Maniratnam Suhasini Son Nandan Latest Photo in London

இந்த படத்திற்கு இசைப்புயல் ஏ.ஆர். ரஹ்மான் இசையமைக்கிறார் என்றும் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.  மேலும் 2024 ஆம் ஆண்டு இந்த திரைப்படம் வெளியாகும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.

பொன்னியின் செல்வன் & விக்ரம் படங்களின் மாபெரும் வெற்றிக்கு பின் மணிரத்னம் & கமல்ஹாசன் கூட்டணி அமைந்துள்ளது ரசிகர்கள் மத்தியில் படம் குறித்த எதிர்பார்ப்பை அதிகப்படுத்தி உள்ளது.

இந்நிலையில் இயக்குனர் மணிரத்னத்தின் மகன் நந்தன் & சுஹாசினி மணிரத்னம் லண்டனில் எடுத்து கொண்ட புகைப்படங்கள் வெளியாகி உள்ளன. இந்த புகைப்படங்களை சுஹாசினி மணிரத்னம் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்துள்ளார். லண்டன் நகரில் உள்ள நந்தனின் அலுவலகத்தில் நடைபெற்ற விழாவில் இந்த புகைப்படங்கள் எடுக்கப்பட்டுள்ளன என்றும் சுஹாசினி மணிரத்னம் தெரிவித்துள்ளார். நந்தன் மணிரத்னம் லண்டன் ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழகத்தில் இறையியல் பிரிவில் முனைவர் பட்ட மாணவர் என்பது குறிப்பிடத்தக்கது.

Also Read | Naatu Naatu : 2022-ஆம் ஆண்டுக்கான ஆஸ்கார் விருது பட்டியல்.. Shortlist ஆன RRR பட பாடல்.! செம்ம சாதனை

தொடர்புடைய இணைப்புகள்

Maniratnam Suhasini Son Nandan Latest Photo in London

People looking for online information on Maniratnam, Suhasini Maniratnam, Suhasini Son Nandan will find this news story useful.