www.garudabazaar.com

தளபதி, கடல் வரிசையில் அடுத்த படம்? இயக்குனர் மணிரத்னத்தின் அடுத்த பிளான் இது தானா?

முகப்பு > சினிமா செய்திகள்

By |

சென்னை: இயக்குனர் மணிரத்னம் அவர்களின் அடுத்த படம் பற்றிய நம்பத்தகுந்த தகவல்கள் வெளியாகியுள்ளன.

Mani Rathnam next movie after ponniyin Selvan

இந்திய சினிமாவின் மிக முக்கிய இயக்குனர்களில் முதனமையானவர் மணி ரத்னம், ரே திரை மொழியின் வழியில் இந்திய திரைப்படங்களை உருவாக்குவதில் வல்லவர். கடைசியாக செக்க சிவந்த வானம் படத்தினை இயக்கி இருந்தார். சிம்பு, விஜய் சேதுபதி, அரவிந்த் சாமி, அருண் விஜய் ஆகியோர் நடிப்பில் இந்த படம் உருவானது. தமிழ் ரசிகர்களிடம் நல்ல வரவேற்பை பெற்ற இந்த படத்தை தொடர்ந்து தனது கனவு படமான பொன்னியின் செல்வன் படத்தை இயக்கி வருகிறார்.  புகழ்பெற்ற மறைந்த எழுத்தாளர் கல்கி கிருஷ்ணமூர்த்தி அவர்களின் "பொன்னியின் செல்வன்" நாவலை அடிப்படையாக கொண்டு, அதே பெயரில் "பொன்னியின் செல்வன்" படத்தை இரண்டு பாகங்களாக இயக்குனர் மணிரத்னம் இயக்குகிறார். 

Mani Rathnam next movie after ponniyin Selvan

லைகா புரொடக்ஷன்ஸ் மற்றும் மெட்ராஸ் டாக்கீஸ் நிறுவனங்கள் இணைந்து தயாரிக்கின்றன. முழு வீச்சில் நடந்த இப்படத்தின் படப்பிடிப்பு பல நகரங்களில் பல கட்டங்களாக நடைபெற்றது. இதில் பல கட்ட படப்பிடிப்புகள் பாண்டிச்சேரி, ஐத்ராபாத், குவாலியர், ஆர்ச்சா, மகேஸ்வர், பொள்ளாச்ச்சி, உடுமலை, மைசூர் நகரங்களில் நடந்தது. இந்த படத்தின் படப்பிடிப்பு சமீபத்தில் நிறைவுற்றதாக படக்குழு அதிகாரப்பூர்வமாக அறிவித்தது.மேலும் இந்த படத்தின் முதல் பாகம் அடுத்த வருடம் திரைக்கு வர இருக்கிறது. தற்போது படத்தின் பின் தயாரிப்பு கிராபிக்ஃஸ், DI பணிகள் , டப்பிங் பணிகள் நடந்து வருகிறது.

தலைவன் வேற ரகம்... டாக்டர் பட்டம் பெற்ற நடிகர் சிம்பு! வெளிவந்த சூப்பர் மாஸ் புகைப்படங்கள்!

 

Mani Rathnam next movie after ponniyin Selvan

இந்த படத்தில் நடிகர்கள் சியான் விக்ரம், ஜெயம் ரவி, கார்த்தி, ஐஸ்வர்யா ராய், ஐஸ்வர்யா லெக்ஷ்மி, த்ரிஷா, பிரபு, சரத்குமார், விக்ரம் பிரபு, கிஷோர், ஜெயராம், லால், ரஹ்மான், அஸ்வின் ஆகியோர் நடிக்கிறார்கள். சமீபத்தில் படத்தின் போஸ்டர் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றது. இந்த படத்தின் எடிட்டிங்கை ஸ்ரீகர் பிரசாத் கவனித்து வருகிறார்,  கலை இயக்குனராக தோட்டா தரணி பணிபுரிகிறார். ரவி வர்மன் ISC இப்படத்திற்கான ஒளிப்பதிவை செய்கிறார். இசைப்புயல் ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைக்கிறார்.

Mani Rathnam next movie after ponniyin Selvan

பொன்னியின் செல்வன் படத்தை தொடர்ந்து மணிரத்னம் தனது புதிய படத்தை புதுமுக நடிகரை வைத்து எடுக்க இருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. ஏற்கனவே தளபதி படத்தில் அரவிந்த் சாமியை நடிகராகவும், இருவர் படத்தில் ஐஸ்வர்யா ராயையும், கடல் படத்தில் கௌதம் கார்த்திக், துளசி நாயரை அறிமுகப்படுத்தியுள்ளார். இந்த வரிசையில் தற்போது பாடகர் சித் ஸ்ரீராமும் இணைய வாய்ப்புள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.   மணி ரத்னம் இயக்கும் புதிய படத்தில் பாடகர் சித் ஸ்ரீராம் நடிக்க இருப்பதாக பரவும் தகவல் பற்றி அதிகாரப்பூர்வ அறிவிப்பு இன்னும் வெளிவரவில்லை.

பாக்குற நமக்கே டயர்ட் ஆவுதே... சமந்தாவே பகிர்ந்த வேற லெவல் வைரல் வீடியோ!

தளபதி, கடல் வரிசையில் அடுத்த படம்? இயக்குனர் மணிரத்னத்தின் அடுத்த பிளான் இது தானா? வீடியோ

மேலும் செய்திகள்

தொடர்புடைய இணைப்புகள்

Mani Rathnam next movie after ponniyin Selvan

People looking for online information on Mani Rathnam, Ponniyin Selvan will find this news story useful.