தர்ஷனிடம் சேரப்பா பற்றி பேசிய லாஸ்லியா - சீக்ரெட் ரூமில் இருந்து கவனிக்கும் சேரன்!

முகப்பு > சினிமா செய்திகள்

By |

விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பிக் பாஸ் சீசன் 3 நிகழ்ச்சி இறுதிக்கட்டத்தை நெருங்கி வருகிறது. இந்நிகழ்ச்சி சுமார் 78 நாட்களை எட்டியுள்ள நிலையில், போட்டி விறுவிறுப்பாக செல்கிறது. நேற்றைய தினம் சேரன் பிக்பாஸ் வீட்டில் இருந்து வெளியேற்றப்பட்டு சீக்ரெட் ரூமில் தங்கவைக்கப்பட்டார்.

Losliya Cheran Tharshan Bigg Boss Tamil 3 Promo 2 sep 9

இந்நிலையில், இன்றைய எபிசோடிற்கான முதல் புரோமோவில் பிக்பாஸ் வீட்டின் தலைவருக்கான போட்டி நடைபெறுகிறது. அதில் வனிதா, லாஸ்லியா, தர்ஷன் ஆகியோர் பங்கு ஏற்கிறார்கள். இவர்களில் தர்ஷன் மற்றும் வனிதா ஆகியோர் கேப்டன்ஸி டாஸ்க்கில் விட்டுக் கொடுக்க, லாஸ்லியா கேப்டனாக தேர்வாகிறார். போட்டியாளர்கள் விட்டுக்கொடுத்து கேப்டனாவதை தான் விரும்பவில்லை என்பதை லாஸ்லியா குறிப்பிடுகிறார்.

அதையடுத்து, தற்போது வெளியாகியுள்ள 2வது புரொமோ வீடியோவில், கேப்டன்ஸி டாஸ்கில் விட்டுக் கொடுத்தது தொடர்பாக தர்ஷனிடம் லாஸ்லியா போராடுகிறார். அப்போது பேசிய லாஸ்லியா, "ஃபைனல்ஸ்க்கு நாங்க எல்லோரும் சேர்ந்து உன்னை சொன்ன அந்த தியாகம் வேண்டாம்னா அப்போ அது எனக்கு மட்டும் எதுக்கு வேணும்? ஒன்னுமே நடக்காம ஒருத்தங்க வீட்டை விட்டு போயிருக்காங்க.. அதை என்னால ஏத்துக்க முடியல.. கடைசி கட்டத்துல இப்படி ஒரு முடிவு பண்ணாத" என லாஸ்லியா கூறுகிறார்.

இதற்கு தர்ஷன், "இது தியாகம் இல்ல.. இந்த வீட்டு கேட்பனா நீ என்ன பண்ணனும், எதாவது பண்ணி மக்களுக்கும், இந்த வீட்டில் இருக்கவங்களுக்கும் நிரூபிக்கனும்.. நான் Safe-ஆ இருக்கேன். அதுனால இந்த வாய்ப்ப பயன்படுத்துக்கோ. தியாகத்துல இது உனக்கு விட்டுக் கொடுக்கல" என தர்ஷன் கூறுகிறார். இந்த உரையாடல்களை சேரன் சீக்ரெட் ரூமில் இருந்து கவனித்து வருகிறார்.

இந்த வாரத்துக்கான கேப்டனாக லாஸ்லியா பதவி ஏற்பாரா இல்லையா என்பது இன்றைய எபிசோடில் தெரியவரும்.

தர்ஷனிடம் சேரப்பா பற்றி பேசிய லாஸ்லியா - சீக்ரெட் ரூமில் இருந்து கவனிக்கும் சேரன்! வீடியோ