"சுஷாந்த் கடைசியாக போனில் இப்படி பேசினார்"... மகனின் மரணம் குறித்து மௌனம் களைத்த தந்தை...!

முகப்பு > சினிமா செய்திகள்

By |

சமீப காலமாகவே இந்திய சினிமாவில் துக்க நிகழ்வுகள் அதிகரித்து வருகிறது. கலைஞர்கள் பலரும் ஒன்றன்பின் ஒன்றாக மரித்து வருவது ரசிகர்களை அதிர்ச்சியில் ஆழ்த்தி உள்ளது. அந்த வகையில் இளம் நடிகர் சுஷாந்த் சிங் ராஜ்புத் மரணமடைந்த செய்தி பலரையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியது.

சுஷாந்த் கடைசியாக தந்தையிடம் பேசியது Last converstion of sushant singh with father

நடிகர் சுஷாந்த் சிங்கின் தந்தை KK சிங் பாட்னாவில் வசித்து வருகிறார். அவர் ஓய்வு பெற்ற அரசு ஊழியர். அவரது மனைவி 2002-ஆம் ஆண்டு இறந்துவிட்டார். பிரபல ஹிந்துஸ்தான் டைம்ஸ் பத்திரிக்கை வெளியிட்டுள்ள செய்தியின் அடிப்படையில் அவர் தனது தந்தைக்கு அடிக்கடி போன் செய்து அவரது உடல்நலம் பற்றி விசாரிப்பது வழக்கம். மூன்று நாட்களுக்கு முன்பு கூட அவர் தனது தந்தையின் வீட்டில் பணிசெய்யும் லக்ஷ்மி தேவியிடம் "தந்தையை கொரோனா வைரஸிடம் இருந்து மிகவும் பத்திரமாக பார்த்துக்கொள்ளுங்கள்" என்று கூறியுள்ளார். இந்நிலையில் மகனிடமிருந்து இன்று  போன் வந்ததும் ஆவலுடன் எடுத்த தந்தைக்கு அவரது இறப்பு செய்தி இடியாய் விழுந்தது.

இந்நிலையில் அவரது தந்தை நவோதய டைம்ஸ் பத்திரிக்கைக்கு அளித்திருக்கும் பேட்டியில் "எனது மகன் கடைசியாக என்னிடம் பேசியது அவரது திருமணத்தைப் பற்றி தான். அவர் கூறும் பொழுது நான் இந்த கொரோனா நேரத்தில் திருமணம் செய்துகொள்ள விரும்பவில்லை. மேலும் கையில் ஒரு படம் இருக்கிறது அதை முடித்தவுடன் அடுத்த வருடம் பிப்ரவரி அல்லது மார்ச் திருமணம் செய்து கொள்வேன்" என்று அவரது தந்தை கண்ணீருடன் கூறியுள்ளார்.

மேலும் செய்திகள்

சுஷாந்த் கடைசியாக தந்தையிடம் பேசியது Last converstion of sushant singh with father

People looking for online information on Death, Father, Sushant Singh will find this news story useful.