Fakir Other Banner USA

பெண்ணை பலாத்காரம் செய்து வீடியோ எடுத்து மிரட்டிய டிவி நடிகர் கைது

முகப்பு > சினிமா செய்திகள்

By |

பாலியல் பலாத்கார வழக்கில் பிரபல தொலைக்காட்சி நடிகர் கரண் ஓபராய் கைது செய்யப்பட்டுள்ளார்.

karan oberoi arrested for raping and black mailing woman sent to police custody till may 9

தொலைக்காட்சி தொடர்களில் நடித்து வருபவர் கரண் ஓபராய். அவர் கடந்த 2017ம் ஆண்டு ஒரு பெண்ணை திருமணம் செய்து கொள்கிறேன் என்று வாக்குறுதி அளித்து பாலியல் பலாத்காரம் செய்துள்ளார்.

மேலும் அவர் பலாத்காரம் செய்ததை வீடியோ எடுத்து அந்த பெண்ணிடம் பணம் கேட்டு மிரட்டியுள்ளார். பணம் கொடுக்காவிட்டால் அந்த வீடியோவை வெளியிட்டுவிடுவேன் என்று மிரட்டியுள்ளார் கரண். இதையடுத்து அந்த பெண் மும்பை ஓஷிவாரா பகுதி காவல் நிலையத்தில் கரண் ஓபராய் மீது புகார் அளித்தார்.

அவரின் புகாரின்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து கரணை கைது செய்துள்ளனர். பிரபல இயக்குநர் மகேஷ் பட்டின் ஸ்வாபிமான் சீரியல் மூலம் கரண் தனது சின்னத்திரை பயணத்தை துவங்கினார். தொலைக்காட்சி தொடர்களில் நடிப்பதுடன் இல்லாமல் பல விளம்பரங்களிலும் நடித்துள்ளார்.

Update On June 18th 2019

இந்த புகார் தொடர்பாக போலீசார் இரண்டு பேரை கைது செய்து விசாரணை நடத்தினர். விசாரணையில் அந்த இருவரும் புகார் அளித்த பெண்ணின் வழக்கறிஞரான அலி காசிப் கானின் தூரத்து உறவினர்கள் என்பதும், அவர் சொல்லித் தான் தாக்குதல் நடத்தியதும் தெரிய வந்தது.

போலீசார் வழக்கறிஞர் அலியை அழைத்து விசாரித்தபோது அந்த பெண் தான் கரணின் பெயரை கெடுக்க இப்படி ஒரு தாக்குதல் நடத்துமாறு தன்னிடம் கூறியதாக தெரிவித்தார். இதையடுத்து பொய் புகார் அளித்த அந்த பெண்ணை போலீசார் கைது செய்துள்ளனர்.