'நீ எப்போ கவினோட உட்கார்ந்து பேச ஆரம்பிச்சியோ...' - கவினால் லாஸ்லியாவை விமர்சிக்கும் சேரன்

முகப்பு > சினிமா செய்திகள்

By |

விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் பிக்பாஸ் நிகழ்ச்சியில் கடந்த வாரம் கிராமப்புற கலைகளான வில்லுப்பாட்டு, நாடகம் போன்ற கலைகள் போட்டியாளர்களுக்கு கற்றுக்கொடுக்கப்பட்டது. பின்னர் போட்டியாளர்கள் அரங்கேற்றம் செய்தனர்.

Kamal Haasan, Kavin, Losliya, Cheran's Bigg Boss 3 Promo Sept 01

இந்நிலையில் நேற்றைய தினம் (ஆகஸ்ட் 31 ) கமல்ஹாசன் கலைகளின் அவசியத்தை கூறி, வில்லுப்பாட்டு பாடிக்காட்டி அசத்தினார். பின்னர் போட்டியாளர்கள் தாங்கள் ஏன் வெற்றி பெறுவாார்கள் என்ற காரணத்தை கூற வேண்டும் என்பதை கேட்டறிந்தார்.

இந்நிலையில் இன்றைய நிகழ்ச்சியில் ரசிகர் ஒருவர் லாஸ்லியாவிடம் சேரன்  குறித்து கவின் கூறியது பற்றி கேள்வி எழுப்பினார். சேரன் டிராமா பன்றாருனு கவின் தெரிவித்தது குறித்து கேட்கப்பட்ட போது பதில் சொல்ல முடியமல் லாஸ்லிா திணறினார். தற்போது வெளியான 3வது புரோமோவில் தர்ஷனிடம் சேரன் புலம்புகிறார். அந்த பொண்ணு எப்படி அப்படி சொல்லலாம்.

கவின் இன்ஃபூளயன்ஸ் பண்ணதுனால அப்படி பேசுறா? அவளுக்கு பொது இடத்துல எப்படி பேசணும்னு தெரியல என்று சொல்கிறார்.

'நீ எப்போ கவினோட உட்கார்ந்து பேச ஆரம்பிச்சியோ...' - கவினால் லாஸ்லியாவை விமர்சிக்கும் சேரன் வீடியோ