www.garudabazaar.com

SPB-க்காக திருவண்ணாமலை விரைந்த இசைஞானி... தீபம் ஏற்றி பிராத்தனை.. மனதை உருக்கும் புகைப்படங்கள்..!

முகப்பு > சினிமா செய்திகள்

By |

பிரபல பின்னணி பாடகர் எஸ்.பி.பாலசுப்ரமணியம் கடந்த மாதம் 5-ந்தேதி கொரோனா தொற்றினால் பாதிக்கப்பட்டு தனியார் ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். கொரோனாவிலிருந்து மீண்ட பிறகும் நேற்றைய தினம் அவரது உடல்நிலை மோசம் அடைந்தது. இதனால் அவசர சிகிச்சைப் பிரிவுக்கு மாற்றி செயற்கை சுவாச கருவிகள் பொருத்தி சிகிச்சை அளித்தனர். இந்நிலையில் பாடகர் எஸ்.பி.பி நம்மை விட்டு இயற்கை எய்தியுள்ளார்.  தன்னிகரற்ற பாடகருக்கு திரையுலகினரும், ரசிகர்களும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.

Ilaiyaraja's heartwarming gesture for the demise of spb SPB-க்காக திருவண்ணாமலை விரைந்த இசைஞானி

அவர் மருத்துவமனையில் இருந்த போதே இசைஞானி இளையராஜா அவர்கள் வெளியிட்ட உருக்கமான வீடியோ பார்ப்பவர்களின் மனதை உருக்கியது. பின்பு நேற்றைய தினம் இந்த சோக செய்தியை கேட்ட அவர் மிகவும் நொறுங்கி விட்டார். இந்நிலையில் மறைந்த SP பாலசுப்ரமணியம் அவர்களின் ஆத்மா சாந்தி அடைய திருவண்ணாமலையில் சற்று முன் மோட்ச தீபம் ஏற்றினார். மனதை உடைக்கும் இந்த புகைப்படங்கள் தற்போது வெளியாகியுள்ளது.

Tags : SPB, Ilaiyaraja

தொடர்புடைய இணைப்புகள்

Ilaiyaraja's heartwarming gesture for the demise of spb SPB-க்காக திருவண்ணாமலை விரைந்த இசைஞானி

People looking for online information on Ilaiyaraja, SPB will find this news story useful.