www.garudabazaar.com

SPB-க்கு இளையராஜா கடைசியாக அமைத்த பாட்டு - கண்ணீருடன் அஞ்சலி - ''உன் கீதம் இன்று அமைதியானதேன்....?!''

முகப்பு > சினிமா செய்திகள்

By |

மறைந்த பாடகர் எஸ்பிபியின் உடலுக்கு பிரபலங்கள், ரசிகர்கள் பலரும் நேரில் வந்து அஞ்சலி செலுத்தி வருகின்றனர். பலரும் கண்ணீர் மல்க நின்றது காண்போரை நெகிழச் செய்தது. பல தலைமுறை ரசிகர்களையும் தன் குரலால் கவலைகளை மறக்க செய்தவர் இன்று நம்மிடையே இல்லை என்ற செய்தி அவர்களை சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.

Ilaiyaraaja composed a song for SPB | எஸ்பிக்காக இளையரராஜா உருவாக்கிய கடைசி பாடல்

தற்போது அவரது உடல் தாமரைப்பாக்கம் பண்ணை வீட்டில் வைக்கப்பட்டுள்ளது. அவருக்கு அவரது மகன் எஸ்.பி.பி.சரண் அவருக்கு செய்ய வேண்டிய இறுதிச்சடங்கை செய்து வருகிறார். அதன் பிறகு அவரது உடல் அரசு மரியாதையுடன் நல்லடக்கம் செய்யப்படவிருக்கிறது. தற்போது பிரபலங்கள், ரசிகர்கள் என ஒரு சேர நேரில் வந்து அவரது உடலுக்கு அஞ்சலி செலுத்தி வருகின்றனர்.

அதன் ஒரு பகுதியாக இசைஞானி இளையராஜா தனது நீண்ட கால நண்பர் எஸ்பிபிக்கு புதிதாக உருவாக்கப்பட்ட பாடல் மூலம் இறுதி அஞ்சலி செலுத்தினார். கானம் பாடியே... வானம்பாடியே... உன் கீதம் இன்று அமைதியானதேன் என்று அவர் கண்ணீருடன் பாடிய பாடல் கேட்போரை நிச்சயம் உருகச் செய்யும்.

SPB-க்கு இளையராஜா கடைசியாக அமைத்த பாட்டு - கண்ணீருடன் அஞ்சலி - ''உன் கீதம் இன்று அமைதியானதேன்....?!'' வீடியோ

தொடர்புடைய செய்திகள்

தொடர்புடைய இணைப்புகள்

Ilaiyaraaja composed a song for SPB | எஸ்பிக்காக இளையரராஜா உருவாக்கிய கடைசி பாடல்

People looking for online information on Ilaiyaraaja, SP Balasubrahmanyam, SPB will find this news story useful.