ரம்யா இல்லனா 'அந்த' விஷயம் எப்பவோ நடந்துருக்கும்... ரசிகர்கள் ஆதரவு!

முகப்பு > சினிமா செய்திகள்

By |

பிக்பாஸ் வீட்டில் தற்போது பிரீஸ் டாஸ்க் நடைபெற்று வருகிறது. போட்டியாளர்களின் குடும்பத்தினர் ஒவ்வொருவராக உள்ளே வந்து சென்ற காட்சிகள் கடந்த சில நாட்களாக ஒளிபரப்பாகி வருகின்றன. அந்த வகையில் நேற்று அஜீத்தின் அம்மா மற்றும் அவரின் சகோதரி இருவரும் வீட்டுக்குள் வந்தனர். பிரீஸ் டாஸ்க்கில் இருந்த ஆஜீத் அவர்களை பார்த்ததும் எழுந்து சென்று கட்டிப்பிடித்து கண் கலங்கினார்.

''If She is not given that card'' fans supported to Ramya

பின்னர் அனைவருக்கும் பிக்பாஸ் ரிலீஸ் சொல்ல அவர்கள் சென்று ஆஜீத்தின் குடும்பத்தாருடன் உரையாடி மகிழ்ந்தனர். அப்போது அவரின் சகோதரி ஆஜீத் கொஞ்சம் குழப்பமா இருக்கான். யாராவது அவனுக்கு எடுத்து சொல்லி இருக்கலாம் என்று வருத்தம் தெரிவித்தார். அதற்கு ஆரி எங்க சொல்ல விட்டாங்க என ஜாலியாக அலுத்து கொண்டார். பின்னர் தனியாக ஆஜீத்துடன் அவரின் சகோதரி மற்றும் அம்மா இருவரும் உரையாடினார்.

அப்போது அவரின் சகோதரி, ''ரம்யா உன்கூட நல்லா தான் பேசுறாங்க. ஆனா நீ கம்மியா இருக்கேன்னு அவங்க உன்கிட்ட சொன்னதே இல்ல. அதைத்தான் அவங்க எல்லார் கிட்டயும் சொன்னேன். அப்போ சகோதரன், சகோதரி பந்தத்தை எதுக்கு உருவாக்கணும்? உனக்கு குழப்பமாக இருந்தால் பேசுவதற்கு ஒருத்தராவது வேணும் இந்த வீட்டுல. உன் வாழ்க்கை முழுவதும் எங்களால் கூட இருக்க முடியாது,'' என அறிவுரை கூறினார்.

பதிலுக்கு ஆஜீத் அவங்க எல்லாம் போட்டியாளர்கள் அப்படித்தான் இருப்பாங்க என ஆறுதல் கூறினார். இதைப்பார்த்த நெட்டிசன்கள் ரம்யா மட்டும் அந்த எவிக்ஷன் பாஸ் கொடுக்கலேன்னா ஆஜீத் இவ்வளவு நாள் இங்க இருந்துருக்க மாட்டாரு என அவருக்கு ஆதரவு தெரிவித்து வருகின்றனர்.

தொடர்புடைய இணைப்புகள்

''If She is not given that card'' fans supported to Ramya

People looking for online information on Bigg Boss 4 Tamil will find this news story useful.