இயக்குநர் கௌதம் மேனன் அதிரடி - ''அந்த படம் பண்ணதுக்கு ஒரே காரணம்...''

முகப்பு > சினிமா செய்திகள்

By |

'எனை நோக்கி பாயும் தோட்டா' படத்துக்கு பிறகு இயக்குநர் கௌதம் மேனன் தற்போது 'ஜோஸ்வா இமை போல் காக்க' என்ற படத்தை இயக்கி வருகிறார்.  இந்த படத்தில் வேல்ஸ் ஃபிலிம் இண்டர்நேஷனல் நிறுவனம் தாயாரித்து வருகிறது.

ஃபகத் பாசில், நஸ்ரியாவின் டிரான்ஸ் குறித்து கௌதம் மேனன் பேச்சு | Gautham Menon Speaks about Fahad Faasil Nazriya Nazim's Trance

இந்த படத்தில் வருண் மற்றும் ராணி கதாநாயகன் மற்றும் கதாநாயகியாக நடித்து வருகின்றனர். தர்புகா சிவா இசையமைக்கும் இந்த படத்துக்கு எஸ்.ஆர்.கதிர் ஒளிப்பதிவு செய்து வருகிறார். இந்த படத்தின் டீஸர் சமீபத்தில் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்று வருகிறது.

கௌதம் மேனன் தற்போது ஃபகத் பாசில், நஸ்ரியா இணைந்து நடிக்கும் ' டிரான்ஸ்' (Trance) படத்தில் முக்கிய வேடத்தில் நடித்துள்ளார். இந்த படம் நேற்று (பிப்ரவரி 21) திரையரங்குகளில் வெளியாகியுள்ளது. இந்த படம் குறித்தும், பல்வேறு விஷயங்கள் குறித்து இயக்குநர் கௌதம் மேனன் Behindwoods ICE-க்கு பிரத்யேகமாக பேட்டியளித்தார்.

அப்போது பேசிய அவர், நான் நடிக்கணும், கேமரா முன்னாடி இருக்கணும்னு எனக்கு ஆசையில்ல. நான் இந்த படம் பண்ணதுக்கு காரணம் படத்தில் பணிபுரியும் படக்குழுவினர். நான் இயக்குநர் அன்வரின் படங்களை பார்த்திருக்கிறேன். அவருடைய பணி எனக்கு படிக்கும். அவரிடம் 'நான் ஏன் இந்த படம் நடிக்கணும்'னு கேட்டேன். அதற்கு அவர், உங்களுடைய இண்டர்வியூலாம் பார்த்திருக்கேன். நீங்கள் பேசும் கவர்ந்தது என்றார்.

நான் பொதுவா ஸ்டார்ஸ்க்காக படம் பண்ண மாட்டேன். சில சமயங்களில் நடிக்கும் நடிகர்கள் யாருனு தெரியும். 'விண்ணைத் தாண்டி வருவாயா' முதலில் மகேஷ் பாபுவுக்காக எழுதுனேன். அப்புறம் தான் சிம்பு அவருடைய ஓன் ஸ்டைலில் பண்ணார். ஒரு சில படங்கள் அப்படி செய்து அது பெரிதாக வொர்க் ஆகல'' என்று தெரிவித்தார்.

இயக்குநர் கௌதம் மேனன் அதிரடி - ''அந்த படம் பண்ணதுக்கு ஒரே காரணம்...'' வீடியோ

Entertainment sub editor