“கணவர் இறந்தப்போ அழல!”.. பாவனி பகிர்ந்த உருக்கமான விஷயம்!.. கண்ணீர் விடும் ரசிகர்கள்!

முகப்பு > சினிமா செய்திகள்

By |

பிக்பாஸ் நிகழ்ச்சியின் 5வது சீசன் முதல் நாளன்று நிகழ்ச்சியில் கலந்து கொள்ளும் போட்டியாளர்களை, கமல்ஹாசன் அறிமுகப்படுத்தி வைத்தார்.

didn cry for husbands death pavani reddy emotion biggbosstamil5

இந்த போட்டியாளர்களில் ஒருவர்தான் பாவனி ரெட்டி. விஜய்டிவியில் ஒளிபரப்பாகி வந்த சின்னத்தம்பி, ரெட்டைவால் குருவி உள்ளிட்ட சீரியல்களில் நடித்த பாவனி ரெட்டி இந்நிகழ்ச்சியில் அறிமுகமாகும்போது, தனது கணவர் தற்கொலை செய்துகொண்டுவிட்டதாக கூறி அதிர வைத்தார்.

ஆம், வீட்டில் சுதந்திரமாக குழந்தைகளை பார்த்துக்கொண்டு சராசரி வாழ்க்கையை வாழ நினைத்த தமது திட்டங்களை எல்லாம் அடியோடு புரட்டிப் போடும் வகையில் எதிர்பாராத சம்பவமாக தனது கணவர் தற்கொலை நிகழ்ந்ததாகவும், அதற்காக தான் பழிக்கப்பட்டு வருவதாகவும், அந்த வலியுடனும் இழப்புகளுடனும் இப்போது வரைக்கும் தன் பயணம் தொடர்ந்து கொண்டிருப்பதாகவும் பாவனி ரெட்டி தெரிவித்திருந்தார்.

மேலும் பேசியவர், “எனக்குள் கோபமும் இருக்கிறது. குறும்பும் இருக்கிறது. நான் என்னை வெளிப்படுத்துவேன். இது தான் நான்” என்று குறிப்பிட்டதற்கு, கமல்ஹாசன், “அதுதான் இந்த வீடு.. இந்த வீட்டில் நீங்கள் நீங்களாக இருப்பது தான் முக்கியம்!” என்று குறிப்பிட்டிருந்தார். முன்னதாக தன்னுடைய கணவரின் குடும்பம் தனக்கு மிகவும் உறுதுணையாக இருப்பதாகவும் பாவனி ரெட்டி தெரிவித்திருந்தார். இவருடைய கதையை கேட்டு, ரசிகர்கள், ‘இப்படி ஒரு நிலைமை இந்த சின்ன வயசுல இந்த பொண்ணுக்கா? இந்த நிலை யாருக்குமே வரக்கூடாதுப்பா’ என சோகமாக பேசி வந்தனர்.

இந்த நிலையில் தற்போது இசைவாணியுடன் பாவனி ரெட்டி பேசும்போது, தம் மனதில் இருக்கும் உணர்வை உருக்கமாக வெளிப்படுத்தி இருக்கிறார்.  ஆம், பாவனி ரெட்டியிடம், அவரது இல்வாழ்க்கை குறித்து இசைவாணி கேட்க, அதற்கு பாவனி ரெட்டி ஏதோ சொல்ல, ஆனால், தனக்கு புரியவில்லை.. இருந்தாலும் தலையாட்டுவதாக இசைவாணி கூறினார்.

மீண்டும் அவருக்கு விளக்கம் அளித்த பாவனி ரெட்டி, தன் கணவர் உயிருடன் இல்லை; இறந்துவிட்டார் என்று கூறுகிறார். இதைக் கேட்டதும், எல்லார் வாழ்க்கையிலும் இப்படி நடக்கிறது என்று இசைவாணி கூற, ஆனால் பாவனி, தனக்கு அழுகை வரவில்லை என்றும் அதற்கு மாறாக அதிர்ச்சிதான் வந்தது என்றும் கூறுகிறார்.

குறிப்பாக தன்கணவர் இறந்த பிறகு தான் அழவே இல்லை என்றும், என்ன நடந்தது என்று, நடந்ததை ரீகலைக்ட் செய்தபடி யோசித்துக்கொண்டு அப்படியே உட்கார்ந்து இருந்ததாகவும் குறிப்பிடுகிறார். இதனால் பலரும் பாவனி ரெட்டிக்கு ஆறுதல் கூறி வருகின்றனர்.

Also Read: “சார்பட்டா எஃபெக்டா..?!”.. ‘பிக்பாஸ்-க்கு வெச்ச பட்டப் பெயர்களை நோட் பண்ணீங்களா?

தொடர்புடைய இணைப்புகள்

didn cry for husbands death pavani reddy emotion biggbosstamil5

People looking for online information on Abhinav, Akshara Reddy, பிக்பாஸ், விஜய் டிவி BBTamilSeason5, Biggbosstamil, BiggBossTamil5, Chinnaponnu, GrandLaunch, Ikky Berry, ImanAnnachi, Isaivani, Kamalhassan, Master Cibi, Pavani Reddy, Pavni reddy, Raju, Thamarai Selvi, Varun, VijayTelevision, VJ Priyanka will find this news story useful.