www.garudabazaar.com

பரபரப்பு! நடிகையின் வாக்குமூலம்.. நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தப்படுகிறாரா ஹரி நாடார்?

முகப்பு > சினிமா செய்திகள்

By |

ஹரி நாடார்: நடிகை விஜயலட்சுமி விவகாரத்தில் ஹரி நாடார் சைதாப்பேட்டை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்த படுவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

chennai police takes hari nadar to court vijayalakshmi issue

நடிகை விஜயலட்சுமி

தமிழில் விஜய், சூர்யா, வடிவேலு உள்ளிட்டோர் நடித்து சூப்பர் ஹிட் அடித்த ஃப்ரென்ட்ஸ் திரைப்படத்தில் நடித்து பிரபலமானவர் நடிகை விஜயலட்சுமி. மேலும் ஆர்யா நடித்த பாஸ் என்கிற பாஸ்கரன், ஹிப் ஹாப் தமிழா ஆதி நடித்த மீசைய முறுக்கு உள்ளிட்ட படங்களிலும் இவர் நடித்துள்ளார்.

Also Read: குத்தலும் குடைச்சலும் கலந்ததுதான் வாழ்க்கை.. கணவன் மனைவி பிரிவு குறித்து இயக்குநர் எஸ்.ஏ.சந்திரசேகர் வேதனை!

மரண வாக்குமூலம்

கடந்த 2020-ஆம் ஆண்டு நடிகை விஜயலட்சுமி அளித்த வாக்குமூலத்தில், நாம் தமிழர் கட்சி  ஒருங்கிணைப்பாளர் சீமான், பனங்காட்டு படை கட்சியின் ஒருங்கிணைப்பாளர் ஹரிநாடார்  மற்றும் சதா ஆகியோர் தன்னை மிரட்டியதாக கூறி, அதனால், தான் தன் உயிரை மாய்த்துக்கொள்ள முயன்றதாக கூறியிருந்தார்.

பெங்களூரு சிறை

இந்நிலையில் பெங்களூரு பரப்பன அக்ரஹாரா மத்திய சிறையில், ஏற்கனவே ஒரு குற்ற வழக்கில் சிறைவாசியாக இருந்து வரும் ஹரிநாடார் சென்னை,  திருவான்மியூர்  போலீசாரால் விஜயலட்சுமி விவகாரம் தொடர்பான குற்ற  வழக்கிற்காக சைதாப்பேட்டை  நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தப்படவிருப்பதாக தெரியவந்துள்ளது.

சென்னை நீதிமன்றம்

இதனிடையே, சென்னை, திருவான்மியூர் காவல் ஆய்வாளர் ராமசுந்தரம் தலைமையிலான காவலர்கள், ஹரி நாடாரை சைதாப்பேட்டை  நீதியரசர்  முன்னிலையில் ஜனவரி 20, 2022 மதியம் 2 மணியளவில்  ஆஜர்படுத்த இருப்பதாகவும் கூறப்படுகிறது.

Also Read: போடு சக்க! கடற்கரை.. நீச்சல் உடை.. Beast ஹீரோயின்.. தீயாய் பரவும் படு கிளாமர் Photo!

தொடர்புடைய செய்திகள்

chennai police takes hari nadar to court vijayalakshmi issue

People looking for online information on சென்னை, சைதாப்பேட்டை, நடிகை விஜயலட்சுமி, நீதிமன்றம், ஹரி நாடார், Hari naadaar, Hari nadaar, Hari nadar will find this news story useful.