www.garudabazaar.com

"நான் தப்பா டச் பண்ணேனா?".. பரபரப்பான பொம்மை டாஸ்க்.. அக்‌ஷரா சொன்னதை ரிவீல் செய்த நிரூப்!

முகப்பு > சினிமா செய்திகள்

By |

பிக்பாஸ் நிகழ்ச்சியின் 5வது சீசனில் தற்போது போட்டியாளர்களின் பெயர்கள் குறிக்கப்பட்ட பொம்மைகளை எடுத்துக்கொண்டு போட்டியாளர்கள் அனைவரும் ஒரு கூடாரத்துக்கு ஓடக்கூடிய புதிய டாஸ்க் நடந்துவருகிறது.

biggbosstamil5 niroop reveals what akshara told for holding her

இதில், ஒவ்வொரு போட்டியாளரும் தங்கள் பெயர் தவிர்த்து வேறு பெயர் எழுதி ஒட்டப்பட்ட பொம்மையை எடுத்துக் கொண்டு ஓடவேண்டும். அப்படி தாங்கள் எடுத்துச் செல்லும் பொம்மையில் உள்ள பெயருக்குரிய போட்டியாளர் லக்ஜூரி பட்ஜெட் டாஸ்கில் இருந்து எலிமினேட் ஆகாமல் காப்பாற்றப்படுவார். அதே சமயம், கடைசியாக வருபவரின் கையில் எந்த பொம்மை இருக்கிறதோ, அந்த பொம்மையில் இருக்கும் பெயருக்குரிய போட்டியாளர் இந்த லக்ஜூரி பட்ஜெட்டில் இருந்து வெளியேற்றப்படுவார்.

அதாவது இந்த டாஸ்கில், ஒரு போட்டியாளர் நினைத்தால், சக போட்டியாளரை காப்பாற்றவும் முடியும், அதேசமயம், ஒரு குறிப்பிட்ட போட்டியளரின் பெயர் ஒட்டப்பட்ட பொம்மையை எடுத்துக்கொண்டு கடைசியாக ஓடிவந்தோ அல்லது கூடாரத்துக்குள் செல்லாமல், வெளியே நின்றுவிடுவதன் மூலமோ ஒரு போட்டியாளரை வெளியேறச் செய்யவும் முடியும்.

இதனால் சக போட்டியாளர்களை தடுக்கவும் செய்யலாம் என்கிற யோசனையில் நிரூப் அக்‌ஷராவை பிடித்து தன் பலத்தால் கட்டி நிறுத்திக்கொண்டார். ஆனால் அவ்வாறு நகர கூட முடியாமல் பிடித்ததற்கு அக்‌ஷரா எதிர்ப்பு தெரிவிக்க, வருணோ, நிரூப்பின் இந்த செயலால் அதிருப்தி அடைந்ததுடன், அடுத்து நிரூப்பின் பொம்மையை எடுத்துக்கொண்டு கூடாரத்துக்குள் போகாமல் வெளியே நின்று கொண்டார்.

இதனால் வருணை நிரூப் பிடித்து இழுக்க முயற்சிக்க, இருவருக்குள்ளும் வாய்ச்சண்டை, வாக்குவாதங்கள் வலுத்தன. இருவரும் தொண்டை கிழிய கெட்ட வார்த்தைகள் எல்லாம் பேசி சண்டை போட்டுக்கொண்டனர். பின்னர் இதுகுறித்த பேச்சில் சிபி நுழைந்து கருத்து சொல்லும்போது, நிரூப்க்கு சப்போர்ட் பண்ணி, அக்‌ஷராவிடமும் வருணிடமும் கோபமாகவும் அநாகரிகமாகவும் பேசிவிட்டார்.

இதனால் கொந்தளித்த அக்‌ஷரா,  “எப்படி அந்த வார்த்தையை பேசலாம்? என்ன வார்த்தை பேசுகிறான்?” என்று ஆக்ரோஷமாக கத்தத் தொடங்கினார். அனைவரும் அவரை சமாதானப்படுத்த முயன்றனர்.

ஆனால் அக்‌ஷரா தனக்கு வந்த உச்சகட்ட கோபத்தில் தன் கையில் இருந்த பொம்மையை தூக்கி அடித்ததுடன், அங்கிருந்த கப்போர்டில் தன் கையை, ஓங்கி அடித்துக் கொண்டார். 

இந்நிலையில் இதுகுறித்து தற்போது இமான், சிபி, நிரூப் மூவரும் ஓரிடத்தில் அமர்ந்து பேசிக்கொண்டிருந்தனர்.

அப்போது பேசிய நிரூப், “நான்  ஒரு கேள்விதான் கேட்டேன். இப்படியெல்லாம் பேசுறீங்களே? எனக்கு என்ன தெரியணும்னா.. நான் உங்கள தப்பா டச் பண்ணேனா? நான் எதாவது தப்பா தொட்டேனா? என கேட்டேன். அவளும் இல்லை என்று சொல்லிவிட்டாள்.

அவ்வளவுதான், நான் அதை தாண்டி நான் தப்பா எதுவும் பண்ணல!” என்று நிரூப் பேசும் புரோமோ வெளியாகியிருக்கிறது.

biggbosstamil5 niroop reveals what akshara told for holding her

People looking for online information on Akshara, Akshara Reddy, Biggboss, Biggbosstamil, BiggBossTamil5, Ciby, Niroop, Varun will find this news story useful.