www.garudabazaar.com

நேர்மையே இல்ல 'பொய்' சொல்றாரு... மீண்டும் ஆரிக்கு 'ஸ்கெட்ச்' போடும் பாலாஜி!

முகப்பு > சினிமா செய்திகள்

By |

இதுநாள்வரை எனக்கு கேப்டன் பதவி வேண்டாம் என பந்தா காட்டிய பாலாஜி முருகதாஸ் நேற்று கேப்டன் ஆகியே தீருவேன் என ஒற்றைக்காலில் நின்றார். ஆனால் விதி விளையாடி விட்டது. தான் ஜெயித்து விடுவோம் என நம்பிக்கொண்டு இருந்த பாலாஜியே ஷாக் ஆகிவிட்டார் என்றால் பார்த்து கொள்ளுங்கள். பாலாஜி பிறரின் பந்துகளை தட்டிவிட்டதாக சொல்லியும் அவர் ஒப்புக்கொள்ளவில்லை.

Balaji Not ready to accept the truth, twitter reacts

கடைசியில் ரியோ எப்படி இருந்தாலும் ரமேஷ் தான் ஜெயிப்பார் என்று சொன்னதும் தான் ஓரளவு ஒப்புக்கொண்டார். ஆனாலும் அவருக்கு அந்த வருத்தம் தீரவில்லை போல. பின்னர் ஷிவானியிடமும் இதுகுறித்து அவர் புலம்பி கொண்டிருந்தார். குறிப்பாக ஆரி பொய் சொல்லி விட்டார். அவர் நேர்மையாக இல்லை. எனக்கு அநியாயம் செய்து விட்டனர் என்று தெரிவித்தார்.

நான் இந்த ஆட்டத்துக்கே வரவில்லை என்று ஒதுங்கியும் கூட ஆரியை, பாலாஜி அவ்வளவு எளிதாக மன்னிப்பதாக இல்லை. ஏற்கனவே ஆரி-பாலாஜி இடையில் கைகலப்பு ஏற்பட்டு விடலாம் என்பது போல பல சண்டைகள் நடந்து முடிந்துள்ளன. தற்போது இதுவும் சேர்ந்து கொண்டதால் இந்த வாரம் முழுக்க பாலாஜி, ஆரியை சீண்டலாம் என ரசிகர்களின் கருத்தாக உள்ளது.

தொடர்புடைய இணைப்புகள்

Balaji Not ready to accept the truth, twitter reacts

People looking for online information on Bigg Boss 4 Tamil will find this news story useful.