www.garudabazaar.com

"வச்சு செஞ்சிட்டே, உன்ன நம்பவே மாட்டேன்".. அசீம் பண்ண காரியத்தால் வெறுப்பில் மணிகண்டன்!!

முகப்பு > சினிமா செய்திகள்

By |

தமிழில் தற்போது ஒளிபரப்பாகி வரும் பிக்பாஸ் ஆறாவது சீசனில் ஒவ்வொரு எபிசோடும் அசத்தலாக சென்று கொண்டிருப்பதற்கு காரணம், ஒவ்வொரு வாரமும் கொடுக்கப்படும் புது புது டாஸ்க்குகள் தான்.

Azeem and manikanta clash in flower stole in night bigg boss

Also Read | DSP : இது நல்லாருக்கே..!! பிரபல இளம் ஹீரோவுக்கு வில்லனா நடிக்க Ok சொன்ன விஜய் சேதுபதி..

இதன் காரணமாக, பிக்பாஸ் நிகழ்ச்சியும் டாப் கியரில் சென்று கொண்டிருப்பதால் பார்வையாளர்களும் அதிக ஆர்வத்துடன் இந்த நிகழ்ச்சியை பார்த்து வருகின்றனர்.

அதே வேளையில், டாஸ்க்கின் பெயரில் ஒவ்வொரு நாளும் எக்கச்சக்க சண்டைகள் மற்றும் சச்சரவுகளும் பிக்பாஸ் வீட்டில் அரங்கேறிய வண்ணம் தான் உள்ளது.

அப்படி ஒரு சூழலில், இந்த வாரத்திற்கான டாஸ்க்காக பழங்குடியின மக்கள் vs ஏலியன்ஸ் என்னும் டாஸ்க்கும் பிக்பாஸ் வீட்டில் நடைபெற்றது. இதில் பழங்குடியின மக்களாக அசீம், ஷிவின், விக்ரமன், ஏடிகே, ராம், விஜே கதிரவன், மைனா ஆகியோர் முதல் நாள் இருந்தனர். ஏலியன்களாக தனலட்சுமி, குயின்ஸி, ஜனனி, அமுதவாணன், ரச்சிதா, ஆயிஷா, மணிகண்டா ஆகியோர் இருந்தனர்.

 Azeem and manikanta clash in flower stole in night bigg boss

இந்த ஆட்டத்தின்படி பழங்குடி மக்களுக்கு தேவைப்படும் அதிசய பூ, ஏலியன்ஸ்களின் பகுதிலும், ஏலியன்ஸ்களுக்கு தேவைப்படும் அதிசயக் கல் பழங்குடிகளின் பகுதியிலும் இருக்கும். அந்த அதிசயக் கல் பழங்குடிகளின் உழைப்பில் தயாரிக்கப்படும். இதனால் ஒருவர் இன்னொருவரது ஏரியாவுக்குள் சென்று அவர்களுக்கு தேவையானதை எடுத்து வருவது இந்த டாஸ்கில் முக்கிய அம்சம்.

 Azeem and manikanta clash in flower stole in night bigg boss

அப்படி ஒரு சூழலில் ஏலியன்கள் அணியில் இருக்கும் அனைவரும் தூங்கிக் கொண்டிருக்க, இரவு நேரத்தில் பழங்குடி இன மக்கள் அணியில் இருக்கும் அசீம், யாருக்கும் தெரியாமல் வீட்டிற்குள் இருக்கும் அதிசய பூக்களை திருடவும் செய்கிறார். பூக்கள் திருடு போனதை காலையில் மணிகண்டா, அமுதவாணன் மற்றும் குயின்சி, தனலட்சுமி உள்ளிட்ட ஏலியன் அணியில் இருக்கும் போட்டியாளர்கள் கவனிக்கவும் செய்தனர்.

இதுகுறித்து, அசீம் முன்னிலையில் பேசும் அவர்கள், யாரும் பூவை எடுக்கமாட்டார்கள் என கூறியதால் தான் இரவு தூங்க ஒப்புக் கொண்டு சத்தியம் செய்ததால் தான் நாங்கள் கவனிக்கவில்லை என்றும் தெரிவிக்கின்றனர்.

 Azeem and manikanta clash in flower stole in night bigg boss

அசீம் தான் அதை செய்தார் என தெரியாமல் அவர் முன்பு இருந்து அனைவரும் பேசும் நிலையில், இந்த டாஸ்க் முடிந்த பின்னர் அப்படி பூக்களை இரவு நேரத்தில் திருடியது யார் என்றும் ஏலியன் அணியில் இருந்த மணிகண்டன், பழங்குடியின மக்கள் அணியில் இருந்தவர்களிடம் கேட்கிறார்.

கடைசியில் அனைவரின் முன்னிலையிலும் உண்மையை ஒப்புக்கொள்ளும் அசீம், நான்தான் இரவு நேரத்தில் அந்த பூக்களை எல்லாம் திருடி சென்றேன் என்றும் தெரிவிக்கிறார். அப்போது பேசும் மணிகண்டன் "உள்ளே தூங்க விட்டதால் வச்சு செஞ்சுட்டே" என கூறுகிறார். இது டாஸ்க் என அசீம் விளக்க, அப்படி என்றால் உன்னை உள்ளே தூங்க விட்டிருக்க கூடாது என மணிகண்டா வேதனையுடன் குறிப்பிடுகிறார்.

 Azeem and manikanta clash in flower stole in night bigg boss

"நீ என்ன வெளியே தூங்க விட்டிருந்தாலும் நான் வந்து எடுத்து இருக்கலாம்" என அசீம் திருப்பி கருத்துக்களை கூற, "நாங்க அப்புறம் ஏன்டா உங்கள உள்ள தூங்க விடணும். உனக்கு உடம்பு சரியில்லாம இருந்ததுனால தான் நம்பி உள்ள தூங்க விட்டோம்" என மணிகண்டன் குறிப்பிட்ட, தனது அணியில் இருப்பவர்கள் இரவு நேரத்தில் பூக்களை திருட மாட்டோம் என சத்தியம் செய்தது தனக்கு தெரியாது என்றும் அசீம் விளக்குகிறார். டாஸ்க்கிற்காக தான் செய்தேன் என அசீம் தெரிவித்து கொண்டே இருந்தாலும், மணிகண்டன் அதனை ஒப்புக் கொள்ளாமல் நீ சிறப்பாக கேம் ஆடினாய் என தெரிவிக்கிறார்.

முன்னதாக, பிக்பாஸ் வீட்டில் மயக்கமடைந்து அசீம் கீழே விழுந்திருந்ததும் சக போட்டியாளர்கள் மத்தியில் அதிக சலசலப்பை உண்டு பண்ணி இருந்தது. அதே போல, அசீம் மற்றும் அமுதவாணன் ஆகியோரிடையே உருவான சண்டையும் அதிக விவாதத்தை உண்டு பண்ணி இருந்தது குறிப்பிடத்தக்கது.

Also Read | மலேசியால மாஸ் காட்டப்போகும் துணிவு.. தியேட்டர் உரிமத்தை கைப்பற்றிய பிரபல நிறுவனம்!

தொடர்புடைய இணைப்புகள்

Azeem and manikanta clash in flower stole in night bigg boss

People looking for online information on Azeem, Azeem and manikanta clash, Bigg boss 6 tamil, Bigg Boss Tamil, Bigg Boss Tamil 6, Manikandan, Vijay Television, Vijay tv will find this news story useful.