www.garudabazaar.com

திவ்யா ஸ்ரீதர் வழக்கில் அர்னவுக்கு ஜாமீன்.!! வெளிய வந்ததும் சொன்னது என்ன.?

முகப்பு > சினிமா செய்திகள்

By |

கேளடி கண்மணி, மகராசி, கல்யாணப்பரிசு உள்ளிட்ட சீரியல்கள் மூலம் மக்கள் மத்தியில் பிரபலம் ஆனவர் நடிகை திவ்யா ஸ்ரீதர்.

Arnav gets bail in actress divya shridhar case share insta post

மற்றொரு சீரியல் நடிகரான அர்னவ் என்பவரை கடந்த சில மாதங்களுக்கு முன் காதலித்து திருமணமும் செய்து கொண்டார் திவ்யா ஸ்ரீதர்.

இதனைத் தொடர்ந்து, தான் கர்ப்பமாக இருப்பதையும் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் திவ்யா அறிவித்திருந்தார்.

அப்படி ஒரு சூழ்நிலையில், தனது கணவர் அர்னவ் மீது திவ்யா ஸ்ரீதர் சில குற்றச்சாட்டுகளை முன் வைத்து கண்ணீர் வடித்த விஷயம், கடும் பரபரப்பை ஏற்படுத்தி இருந்தது. அது மட்டுமில்லாமல், பிரபல சீரியல் நடிகர் அர்னவ் தன்னை மதம் மாற்றி திருமணம் செய்துகொண்டதாவும், அவர் வேறொரு நடிகையுடன் தொடர்பில் இருப்பதுடன் தன்னிடம் இருந்து விலகி செல்வதாகவும், தன்னுடனான எந்த திருமண ஆதாரத்தையும் வெளியிட கூடாது என வலியுறுத்தி வந்ததாகவும், பெற்றோரிடம் சம்மதம் வாங்காததால் தன்னை விவாகரத்து செய்துவிடவும் தயாராக இருப்பதாகவும் அண்மையில் பிரபல சீரியல் நடிகை திவ்யா ஸ்ரீதர் குற்றம் சாட்டியிருந்தார்.

Arnav gets bail in actress divya shridhar case share insta post

மேலும், தான் கர்ப்பிணியாக இருப்பதை சோசியல் மீடியாவில் அறிவித்ததால் தன்னை அர்னவ் தொடர்ந்து அடித்து துன்புறுத்தி வந்ததாகவும், தன்னை எட்டி உதைத்து, தன் கரு கலையும் அளவுக்கு சென்றுவிட்டதாகவும், கீழ்ப்பாக்கம் மருத்துவமனையில் இருக்கும் தன்னை வந்து தன் கணவர் பார்க்க கூட இல்லை என்றும், குற்றம் சாட்டிய திவ்யா ஸ்ரீதர், திருமண புகைப்படங்கள், போன் கால் ரெக்கார்டிங்ஸ் உள்ளிட்ட ஆதாரங்களுடன் காவல் துறையினரிடம் புகார் அளித்ததாக ஊடகங்களிடம் தெரிவித்திருந்தார்.

தன் மீதான குற்றச்சாட்டை பற்றி பேசி இருந்த அர்னவ், "திவ்யா ஸ்ரீதரை அடித்ததாக சொல்லும் நேரத்தில் வீட்டில் நான் இல்லை என்றும் நான் நடிப்பு துறையில் இருப்பதால், அவர் பொசசிவாக இப்படி நடந்துகொள்கிறார் என்றும் அதற்கு அவரது நண்பர்களின் ஆலோசனையும் காரணம்" என்றும் தெரிவித்திருந்தார்.

Arnav gets bail in actress divya shridhar case share insta post

இது தவிர இன்னும் சில குற்றச்சாட்டுகளை திவ்யா ஸ்ரீதர் மீது அடுக்கிய அர்னவ், அவர் மீது புகார் ஒன்றையும் போலீசில் அளித்திருந்தார். இதனிடையே, விசாரணைக்கு ஆஜராகாமல் இருந்த அர்னவை சீரியல் படப்பிடிப்பு தளத்தில் இருந்து போலீசார் கைது செய்திருந்தனர்.

தொடர்ந்து சிறையில் அடைக்கப்பட்ட அர்னவ், ஜாமீன் கேட்டு இரண்டாவது முறையாக மனு அளித்திருந்தார். இதனை விசாரித்த நீதிபதி, அர்னவுக்கு நிபந்தனை ஜாமீன் வழங்கி உத்தரவிட்டிருந்தார். இதனைத் தொடர்ந்து, சிறையில் இருந்து தற்போது வெளியே வந்துள்ள அர்னவ், தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் புகைப்படம் ஒன்றை பகிர்ந்துள்ளார்.

 

மேலும் தனது கேப்ஷனில், "நீதி வேண்டும்" என்றும் குறிப்பிட்டுள்ளார். இது தொடர்பான பதிவு, தற்போது அதிகம் வைரலாகி வருகிறது.

தொடர்புடைய இணைப்புகள்

Arnav gets bail in actress divya shridhar case share insta post

People looking for online information on Arnav, Divya Shridhar will find this news story useful.