RRR Others USA
www.garudabazaar.com

"பிரேமம் பாத்துட்டு போன் பண்ணிய விஜய்..".. தளபதியுடன் ஒரு படம்..? - இயக்குநர் சொன்ன தகவல்

முகப்பு > சினிமா செய்திகள்

By |

கடந்த 2013 ஆம் ஆண்டு, வெளியான நேரம் படத்தின் மூலம், இயக்குனராக அறிமுகம் ஆனவர் அல்போன்ஸ் புத்ரன்.

Alphonse Puthren hopes to do film with vijay in future

இந்த படம் பெற்ற வெற்றியைத் தொடர்ந்து, 2015 ஆம் ஆண்டு வெளியான 'பிரேமம்' என்னும் திரைப்படத்தை அல்போன்ஸ் இயக்கி இருந்தார்.

மலையாள மொழியில் வெளியாகியிருந்த இந்த திரைப்படம், கேரளாவைத் தாண்டி, தமிழகம் உள்ளிட்ட பல மாநிலங்களில் சக்கை போடு போட்டிருந்தது.

வேற லெவல் ஹிட்

இந்த படத்தில், நிவின் பாலி, சாய் பல்லவி, மடோனா செபாஸ்டியன், அனுபமா பரமேஸ்வரன் உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்திருந்தனர். இதன் பிறகு, சுமார் 6 ஆண்டுகளுக்கு பிறகு, பிரித்விராஜ் மற்றும் நயன்தாரா ஆகியோரை வைத்து 'கோல்ட்' என்னும் திரைப்படத்தை இயக்கி வருகிறார்.

ஆக்டிவாக இருக்கும் அல்போன்ஸ்

இரண்டு படங்கள் மட்டுமே அல்போன்ஸ் புத்ரன் இயக்கி இருந்தாலும், அதன் தாக்கம் மற்றும் வெற்றி, அவரின் அடுத்த படம் எப்போது வெளியாகும் என்ற எதிர்பார்ப்பினை ஏற்கனவே ரசிகர்கள் மத்தியில் உருவாக்கி விட்டது. அது மட்டுமில்லாமல், தன்னுடைய பேஸ்புக் பக்கத்திலும் அதிகம் ஆக்டிவாக இருப்பவர் அல்போன்ஸ்.

விஜய் குறித்த கேள்வி

தன்னுடைய பதிவின் கீழ், ரசிகர்கள் கேட்கும் கேள்விகளுக்கு பதில்களை தெரிவித்து வருவதையும் வழக்கமாக கொண்டுள்ளார். அந்த வகையில், நடிகர் விஜய் குறித்து, ரசிகர் ஒருவர் கேட்ட கேள்விக்கு அல்போன்ஸ் புத்ரன் சொன்ன பதில் தான், சினிமா ரசிகர்கள் மத்தியில் அதிகம் வைரலாகி வருகிறது.

ஜாலியோ ஜிம்கானா

நடிகர் விஜய் நடிப்பில் அடுத்து வெளியாகவுள்ள 'பீஸ்ட்' திரைப்படத்தின் இரண்டாவது சிங்கிளான 'ஜாலியோ ஜிம்கானா' சமீபத்தில் வெளியிடப்பட்டிருந்தது. விஜய் பாடியிருந்த இந்த பாட்டு, முதல் பாடலான 'அரபிக்குத்து' போலவே பட்டித் தொட்டி எங்கும் ஹிட்டடித்து வருகிறது. மேலும், இந்த பாடலின் லிங்கை தன்னுடைய பேஸ்புக் பக்கத்தில் அல்போன்ஸ் புத்ரன் பகிர்ந்திருந்தார்.

லவ் படம் பண்ணுங்க

அப்போது, அதில் கமெண்ட் செய்த ரசிகர் ஒருவர், "ஹாய் சார். எங்கள் தளபதி விஜய்யுடன் நீங்கள் ஒரு லவ் ஸ்டோரியில் இணைந்து பணிபுரிய வேண்டும். நிச்சயம் அது சிறப்பாக வொர்க் அவுட் ஆகி, அனைத்து விதமான பார்வையாளர்களையும் திருப்திப்படுத்தும் வகையில் இருக்கும். மேலும், இண்டஸ்ட்ரி ஹிட் ஆகவும் அமையும்" என குறிப்பிட்டிருந்தார்.

முதலில் அழைத்த தளபதி

ரசிகரின் கமெண்ட்டிற்கு ரிப்ளை செய்த அல்போன்ஸ் புத்ரன், "பிரேமம் ரிலீஸ் ஆன பிறகு, தமிழ்நாட்டில் இருந்து என்னை முதன் முதலில் அழைத்து தளபதி தான். அவருடைய மேனேஜர் மற்றும் தயாரிப்பாளரான ஜெகதீஷ் மூலம் என்னைத் தொடர்பு கொண்டார். தளபதி விஜய்யை ஒருமுறை நேரில் சந்தித்துள்ளேன். ஒரு நாள் என்னை திரைப்படம் இயக்க வேண்டி அவர் அழைப்பார் என நம்புகிறேன். நான் காத்திருக்கிறேன்" என குறிப்பிட்டுள்ளார்.

இரண்டே திரைப்படங்கள் மூலம், கேரளாவைத் தாண்டி, பல இடங்களில் அதிகம் ரசிகர்களை சம்பாதித்துள்ள அல்போன்ஸ் புத்ரனுடன் விஜய் இணைவது ஒரு வேளை நடந்தால், நிச்சயம் சினிமா ரசிகர்களுக்கு அது மிகப் பெரிய விருந்தாக தான் அமையும் என்பது குறிப்பிடத்தக்கது.

தொடர்புடைய இணைப்புகள்

Alphonse Puthren hopes to do film with vijay in future

People looking for online information on Alphonse Putharen, Anirudh Ravichander, Beast, Nelson Dilipkumar, Neram, Premam, Vijay will find this news story useful.