www.garudabazaar.com

எல்லாத்துக்கும் லிமிட் இருக்கு.. அனுமதியின்றி வெளியான PHOTO-க்களால் கடுப்பான ஆலியா பட்..!

முகப்பு > சினிமா செய்திகள்

By |

பாலிவுட்டின் பிரபல நடிகை ஆலியா பட்  இன்ஸ்டாகிராம் பதிவு வைரலாகி வருகிறது.

Alia Bhatt furious Instagram Post and tag Mumbai police

Images are subject to © copyright to their respective owners.

Also Read | 'பத்து தல' வெற்றிக்காக.. வித்தியாசமான கோஷத்துடன் பழனியில் சாமி தரிசனம் செய்த கூல் சுரேஷ்!

ஆலியா பட், பாலிவுட்டின் முக்கியமான இயக்குனரும் தயாரிப்பாளருமான மகேஷ் பட் மற்றும் பிரிட்டிஷ் நடிகை சோனி ரஸ்தான் இவர்களின் மகள் ஆவார்.

குழந்தை நட்சத்திரமாக சில படங்களில் நடித்துள்ள இவர் 2012 ஆம் ஆண்டு கரண் ஜோகர் இயக்கத்தில் வெளியான 'ஸ்டூடென்ட் ஆஃப் தி இயர்' என்ற படத்தின் மூலம் கதாநாயகியாக அறிமுகம் ஆனார்.

தொடர்ந்து இவர் நடித்த Two States, Highway, Udta Punjab, Raazu, Gully boy போன்ற பல படங்கள் இவரை பாலிவுட்டில் முக்கிய இடத்தில் சேர்த்தது. சமீபத்தில் இவர் நடித்த  Gangubhai khaidwadi படமும் மக்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது.

Alia Bhatt furious Instagram Post and tag Mumbai police

சமீபத்தில் RRR படத்திலும், டார்லிங், பிரம்மாஸ்திரா படங்களிலும் ஆலியா பட் நடித்திருந்தார். ஆலியா பட் தற்போது ரன்வீர் சிங்குடன் ராக்கி அவுர் ராணி கி பிரேம் கஹானி படத்திலும் ஆலியா நடித்து வருகிறார்.

நடிகை ஆலியா பட், நடிகர் ரன்பீர் கபூரை கடந்த ஆண்டு ஏப்ரல் 14 அன்று மும்பையில் உள்ள ரன்பீர் இல்லத்தில் திருமணம் செய்து கொண்டார்.

ரன்பீர் கபூர் மற்றும் ஆலியா பட் தம்பதிக்கு கடந்த ஆண்டு நவம்பர் மாதம் 6 ஆம் தேதி  ஆலியா பட்டுக்கு, பெண் குழந்தை  பிறந்தது.

Alia Bhatt furious Instagram Post and tag Mumbai police

Images are subject to © copyright to their respective owners.

குழந்தைக்கு ஆலியா பட் & ரன்பீர் கபூர் இணைத்து ராஹா என பெயர் சூட்டியுள்ளனர். குழந்தை ராஹாவை போட்டோ எடுக்காமல் இருக்க, தம்பதியர் ரன்பீர் கபூர் & ஆலியா பட் இருவரும் ஊடகத்தினரை சந்தித்தனர்.  அப்போது தங்களது மகள் ராஹாவை புகைப்படங்கள் எடுக்க வேண்டாம் என  கேட்டுக் கொண்டனர்.

இச்சூழலில் நடிகை ஆலியா பட் வீட்டில் இருந்த போது அவரது அனுமதியின்றி 2 நபர்கள் பக்கத்து வீட்டு மாடியில் இருந்து, தன்னை புகைப்படம் எடுத்ததாக நடிகை ஆலியா பட் குற்றம் சாட்டியுள்ளார்.

Alia Bhatt furious Instagram Post and tag Mumbai police

Images are subject to © copyright to their respective owners.

இதுகுறித்து தமது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் மும்பை போலீஸை டேக் செய்து ஆலியா பட் பதிவிட்டுள்ளார். அந்த பதிவில், “நீங்கள் எல்லாம் என்னிடம் விளையாடுகிறீர்களா?.. மதிய நேரத்தில் நான் என் வீட்டில்   அமர்ந்திருந்தேன். யாரோ என்னை நீண்ட நேரமாக பார்ப்பதாக உணர்ந்தேன். வீட்டிற்கு வெளியே நான் சுற்றி பார்த்த போது பக்கத்து வீட்டின் மாடியில் கேமராவுடன் இரண்டு நபர்கள் இருந்தார்கள்.

இவ்வுலகில் இதெல்லாம் சரி என எதெல்லாம் அனுமதிக்கப்படுகிறது என எனக்கு தெரியவில்லை. இது ஒருவரின் பிரைவசி மீதான தாக்குதல் ஆகும். எல்லாத்துக்கும் ஒரு லிமிட்  உள்ளது. அந்த லிமிட் இன்று சிலரால் பாதுகாப்பாக கடக்கப்பட்டு விட்டது” என ஆலியா பட் பதிவிட்டுள்ளார்.

Also Read | நெற்றி நிறைய விபூதி பூசி பழனி மலையில் கிரிவலம் சென்ற சந்தானம்..! வைரலாகும் வீடியோ

எல்லாத்துக்கும் லிமிட் இருக்கு.. அனுமதியின்றி வெளியான PHOTO-க்களால் கடுப்பான ஆலியா பட்..! வீடியோ

Tags : Alia Bhatt

தொடர்புடைய இணைப்புகள்

Alia Bhatt furious Instagram Post and tag Mumbai police

People looking for online information on Alia Bhatt will find this news story useful.