www.garudabazaar.com

"இந்த ஆளு கூட பேசவேக் கூடாது..".. முதல் நாளே மாரிமுத்து கூட சண்டை போட்ட எதிர்நீச்சல் மதுமிதா

முகப்பு > சினிமா செய்திகள்

By |

கோலங்கள் தொடர் மூலம் மக்கள் மத்தியில் பிரபலமாக அறியப்பட்டவர் இயக்குனர் திருச்செல்வம். சுமார் 6 ஆண்டுகள் வரை ஒளிபரப்பான இந்த தொடரில், நடிகை தேவயானி முதன்மை கதாபாத்திரத்தில் நடித்திருந்தார்.

Actress Madhumitha about marimuthu in ethirneechal serial

Images are subject to © copyright to their respective owners

திருச்செல்வம் இயக்கத்தில் எதிர்நீச்சல்

இவருடன் தீபா வெங்கட், மஞ்சரி, அஜய் கபூர், சத்யப்ரியா, அபிஷேக் சங்கர், ஸ்ரீ வித்யா உள்ளிட்ட பலரும் கோலங்கள் தொடரில் நடித்திருந்தனர். தமிழ் சீரியல் வரலாற்றிலேயே மிக முக்கியமான ஒரு தொடராக கோலங்கள் பார்க்கப்படும் சூழலில் இந்த தொடரில் நடித்த அனைவரையும் ரசிகர்கள் தற்போது பார்த்தாலும் டக்கென கோலங்கள் தொடரின் நினைவலைகளுக்கு சென்று விடுவார்கள். அந்த அளவுக்கு பலரின் நெருக்கமான தொடர்களில் ஒன்றாகவும் கோலங்கள் அமைந்திருந்தது.

கோலங்கள் தொடரை இயக்கி இருந்த திருச்செல்வம், தற்போது சன் டிவியில் ஒளிபரப்பாகி வரும் எதிர்நீச்சல் என்ற தொடரை இயக்கி வருகிறார். இந்த தொடரில் நடிகர் மாரிமுத்து, கனிகா, பிரியதர்ஷினி, ஹரிப்பிரியா, மதுமிதா, சத்ய பிரியா, பாம்பே ஞானம் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்து வருகிறார்கள். இதுவும் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது.

குணசேகர் பற்றி பேசிய மதுமிதா

அது மட்டுமில்லாமல், தற்போது ட்ரெண்டிங்கில் இருந்து வரும் தொடராகவும் எதிர்நீச்சல் இருப்பதால், தொடர்ந்து இந்த தொடரில் வரும் காட்சிகள் மற்றும் நடிகர், நடிகைகள் குறித்தும் சமூக வலைத்தளங்களில் அதிகம் பேசியும் வருகின்றனர். இந்த நிலையில், எதிர்நீச்சல் தொடரில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வரும் நடிகை மதுமிதா, Behindwoods சேனலுக்காக பிரத்யேக பேட்டி ஒன்றையும் அளித்துள்ளார். அதில், எதிர்நீச்சல் தொடர் குறித்து பல விஷயங்களையும் அவர் பகிர்ந்து கொண்டார். அப்போது நடிகர் மாரிமுத்து குறித்து அவர் பேசிய விஷயங்களும் அதிக கவனம் பெற்று வருகிறது.

Actress Madhumitha about marimuthu in ethirneechal serial

எதிர்நீச்சல் தொடரில் குணசேகர் என்னும் கதாபாத்திரத்தில் நடிகர் மாரிமுத்து நடித்து வருகிறார். ஒரு எதிர்மறை கதாபாத்திரத்தில் அவர் இந்த தொடரில் நடித்து வரும் சூழலில், அவ்வப்போது இணையத்தில் குணசேகர் கதாபாத்திரம் குறித்த வீடியோக்கள் மற்றும் மீம்ஸ்கள் கூட பெரிய அளவில் பேசு பொருளாகவும் இருந்து வருகிறது.

முதல் நாளே சண்டை..

இந்த நிலையில், நடிகை மதுமிதாவும் குணசேகர் கதாபாத்திரம் குறித்து சில விஷயங்களை பேசி உள்ளார். "முதல் நாள் ஷூட்டிங்லயே எங்க ரெண்டு பேருக்கும் நடுவுல சண்டை ஆரம்பிச்சது. இனிமே தேவையில்லாம இந்த ஆள் கூட பேசக்கூடாதுனு அப்ப நினைச்சேன். சார் கூட அப்படி நினைச்சாரு. அது என்ன சண்டைன்னு சொல்ல முடியாது, ஆனா ஒரு குட்டியான சண்ட வந்துச்சு. அப்ப நெனச்சேன், பேசக்கூடாதுன்னு. ஆனா டைம் போக போக, இப்ப நாங்க நல்ல நண்பர்கள் ஆயிட்டோம். இப்ப அப்படியே ஜாலியா தான் போகுது" என தெரிவித்தார்.

Actress Madhumitha about marimuthu in ethirneechal serial

Images are subject to © copyright to their respective owners

அதே போல, நடிகர் மாரிமுத்து குறித்த மீம்ஸ் பற்றிய கேள்விகளுக்கும் நடிகை மதுமிதா பதில் தெரிவித்திருந்தார். "அவரை பத்தின மீம்ஸ் அதிகமாக, எங்களுக்கு நிறைய Hype கிடைக்கும். அதை ரொம்ப பாசிட்டிவ் ஆன வழியில தான் எடுத்துக்குறோம்" என தெரிவித்தார்.

"இந்த ஆளு கூட பேசவேக் கூடாது..".. முதல் நாளே மாரிமுத்து கூட சண்டை போட்ட எதிர்நீச்சல் மதுமிதா வீடியோ

தொடர்புடைய இணைப்புகள்

Actress Madhumitha about marimuthu in ethirneechal serial

People looking for online information on EthirNeechal Serial, Madhumitha, Marimuthu will find this news story useful.