'என்கவுன்டர் பண்ண போலீஸ் மேல Strict Action எடுத்து...' - நடிகை கஸ்தூரி அதிரடி

முகப்பு > சினிமா செய்திகள்

By |

ஹைதராபாத்தில் பெண் மருத்துவர் 4 இளைஞர்களால் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு கொலை செய்யப்பட்டார். இந்த சம்பவம் நாடு முழுவதும் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

Actress Kasthuri comments about Hyderabad Encounter Case

இதனையடுத்து குற்றவாளிக்கு கடும் தண்டனை தர வேண்டும் என பிரபலங்கள் முதல் பொதுமக்கள் வரை கருத்து தெரிவித்தனர். இந்நிலையில் குற்றவாளிகள் இன்று (டிசம்பர் 6) அதிகாலை காவல்துறையினரால் சுட்டுக்கொல்லப்பட்டனர்.

இதனையடுத்து தெலங்கானா அரசுக்கும் காவல்துறையினருக்கும் பாராட்டுக்கள் குவிந்து வருகிறது. அதன் ஒரு பகுதியாக நடிகை கஸ்தூரி ட்வீட் செய்துள்ளார். அதில், ''ஹைதராபாத் போலீஸ் சட்டத்தை தன் கையில் எடுத்துக்கொண்டு பிரியங்கா ரெட்டி விவகாரத்தில் நீதி வழங்கியுள்ளனர். போலீஸ் மீது கடுமையான நடவடிக்கை எடுத்து அவர்களை பொள்ளாச்சி மற்றும் உன்னாவிற்கு உடனியாக மாற்ற வேண்டும்'' என்று குறிப்பிட்டுள்ளார்.