www.garudabazaar.com

இப்பதானே ப்ரோமோ வந்தது?.. அதுக்குள்ள சீரியலை Quit பண்ணும் ஹீரோ.. அவரே சொன்ன காரணம்!

முகப்பு > சினிமா செய்திகள்

By |

சென்னை, 01 பிப்ரவரி 2022 :- பிரபல சீரியலில் நடித்து வந்த நாயகன் பிரஜின் தற்போது அந்த சீரியலில் இருந்து விலகுவதாக அறிவித்துள்ளார்.

actor Prajin beaks why he quited poular new serial

விஜய் டிவி சீரியல்

விஜய் டிவில் அண்மையில் தொடங்கி ஒளிபரப்பாகி வந்த சீரியல் தான் ‘வைதேகி காத்திருந்தாள்’ இண்ட்த சீரியலில் வரும் ஹீரோயின் ஒரு வீட்டுக்கு பேத்தியாக நடிக்கச் செல்வார். அதுவும் வக்கீலாக நடிப்பார். ஆனால் அவர் சென்ற பின்புதான் தெரியும் அது நாயகி சேரவேண்டிய அவரது சொந்த குடும்பம் என்று. இந்த சீரியலில் பிரஜின் ஹீரோவாக இருந்தார்.

Also Read: "எப்ப தாத்தா ஆவீங்க?".. BiggBossUltimate-ல்  ஸ்ருதிஹாசன் திருமணம் பற்றி சூசகமாக பேசிய கமல்!

நடிகர் பிரஜின்

தொடக்கத்தில் விஜேவாக இருந்த நடிகர் பிரஜின் ரசிகர்களிடையே மிகவும் பிரபலமானவர். அதன் பின் விஜய் டிவியில் ஒளிபரப்பான காதலிக்க நேரமில்லை சீரியலில் ஹீரோவாக நடித்தார்.  அந்த சீரியல் பெரும் ஹிட் அடித்த நிலையில் அண்மை வரையில் விஜய் டிவி சின்னத்தம்பி சீரியலிலும், அன்புடன் குஷி சீரியலிலும் ஹீரோவாக நடித்து வந்தார். இந்த சீரியல்கள் மிக குறுகிய காலமே ஓடினாலும் இந்த சீரியல் பலரையும் கவர்ந்தன. அதன் பின்னர்  இந்த சீரியல்களும் முடிவுக்கு வந்தன.

actor Prajin beaks why he quited poular new serial

வைதேகி காத்திருந்தாள் கதை

இதனைத் தொடர்ந்து தான் வைதேகி காத்திருந்தாள் என்கிற இந்த புதிய சீரியல் ப்ரோமோ வெளியாகி பலரையும் கவர்ந்து வந்தது. இந்த சீரியலில் நாயகனின் வீட்டுக்கு செல்லும் நாயகி எப்போது மாட்டிக்கொள்வாள் அத்துடன் அவள் அந்த வீட்டு பெண் தான் என்கிற உண்மை எப்போது வெளிப்படும் என்பதை நோக்கி கதை நகர்கிறது.

இந்த சீரியலில் இருந்து இந்த சீரியலின் நாயகன் பிரஜின் விலகுவதாக அறிவித்திருப்பது அவரது ரசிகர்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்த சீரியலை விட்டு நடிகர் பிரஜின் வெளியேறுவதற்கான காரணம் குறித்து தொடர்ச்சியாக ரசிகர்கள் அங்கலாய்த்து வருகின்றனர். இந்த சீரியலில் நாயகியாக நடிகை சரண்யா நடிக்க, உடன் பழம்பெரும் நடிகை லதா உளிட்ட பலர் நடிக்கின்றனர். 

actor Prajin beaks why he quited poular new serial

உண்மைதான்.. இதுதான் காரணம்..

இந்நிலையில் தான் இந்த சீரியலில் இருந்து விலகியது தொடர்பான கேள்விகளுக்கு நம்மிடையே பிரத்தியேகமாக பதில் பகிர்ந்த நடிகர் பிரஜின், “ஆமாம். வைதேகி காத்திருந்தாள் சீரியலில் இருந்து நான் விலகும் தகவல் உண்மைதான். தற்போது என்னிடம் 6 திரைப்படங்கள் கையில் இருக்கின்றன.

அவற்றில் நடிப்பது, சீரியல் மற்றும் திரைப்படங்களுக்கான கால்ஷீட்டை கொடுப்பது உள்ளிட்ட சிரமங்களால் தற்போது அந்த சீரியலில் இருந்து விலகியிருக்கிறேன்” என்று குறிப்பிட்டு, தான் விலகக் கூடிய தகவலை உறுதிப்படுத்தியுள்ளார்.

Also Read: "ஒரு காதல் என்னதான் செய்யும்?".. "சொல்லி தொலைங்கடா?".. எதுக்குடா இது இப்ப trend ஆகுது! கதறும் சிங்கிள்ஸ்!

தொடர்புடைய இணைப்புகள்

actor Prajin beaks why he quited poular new serial

People looking for online information on சீரியல், விஜய் டிவி, ஸ்டார் விஜய், Latest tamil news, Prajin, TV serial actor, TVSerial, Vijay tv serial today will find this news story useful.