www.garudabazaar.com

"என்னை குழப்பிட்டான்.. அபிஷேக் வெளியே இருப்பதுதான் சரி!!".. சின்னபொண்ணு பரபரப்பு பேட்டி! #BiggBossTamil5

முகப்பு > சினிமா செய்திகள்

By |

பிக்பாஸ் நிகழ்ச்சியின் 5வது சீசனில் நாட்டுப்புறப் பாடகி சின்னப் பொண்ணு இணைந்திருந்தார்.

abhishek elimination is fair chinna ponnu exclusive biggbossl

முன்னதாக நமீதா மாரிமுத்து, தவிர்க்க முடியாத காரணங்களால் பிக்பாஸ் நிகழ்ச்சியில் இருந்து வெளியேறியதாக பிக்பாஸால் அறிவிக்கப்பட்டார். இதனைத் தொடர்ந்து முதல் ஆளாக நாடியா சாங், அவரைத் தொடர்ந்து அபிஷேக் வெளியேற்றப்பட்டனர். கடைசியாக சின்னப்பொண்ணு வெளியேறினார்.

திரைப்படங்களில் பல்வேறு பாடல்களை பாடிய சின்ன பொண்ணுவுக்கு உலகெங்கும் இருக்கும் தமிழர்கள் ரசிகர்களாக உள்ளனர். பிக்பாஸ் வீட்டிலும் பல்வேறு சூழ்நிலைகளில் சின்னப்பொண்ணுவின் நாட்டுப்புற பாடல்களை கேட்க முடிந்தது. குறிப்பாக அபிஷேக் தன் பெற்றோர் நினைவு வந்ததாக சொல்லி அழுதபோது சின்னப்பொண்ணு தான் வழக்கமாக பாடும் பிரபலமான அம்மா பாடலை பாடினார்.

இந்நிலையில் எலிமினேஷனுக்கு பிறகு தற்போது பிஹைண்ட்வுட்ஸ்க்கு பேட்டி அளித்த சின்னப்பொண்ணு, தயாரிப்பாளர் ரவீந்தரின் பல்வேறு கேள்விகளுக்கு பதில் அளித்தார்.

அப்போது அபிஷேக் வெளியேறியது குறித்த கேள்விக்கு, பதில் அளித்த சின்னப்பொண்ணு, “அபிஷேக் உள்ளே இருந்தவரை ஆத்தா.. ஆத்தா என ரொம்ப பாசமாக இருந்தார். காயின் டாஸ்கில் கூட எனக்காக தான் பார்த்தேன் என சொன்னார். ஆனால் தாமரை அக்காவுக்காக தான் விளையாடுவதாக கூறினார்.

பின்னர் அக்‌ஷரா எனக்காக விளையாடுகிறார் என்றெல்லாம் சொல்லி, என்னை குழப்பி, என்னை ஊமையாக்கி வைத்துவிட்டு சென்றுவிட்டார். அவர் வெளியே வந்த வரைக்கும் பரவாயில்லை என்றுதான் நினைக்கிறேன்.” என குறிப்பிட்டுள்ளார்.

"என்னை குழப்பிட்டான்.. அபிஷேக் வெளியே இருப்பதுதான் சரி!!".. சின்னபொண்ணு பரபரப்பு பேட்டி! #BIGGBOSSTAMIL5 வீடியோ

மேலும் செய்திகள்

தொடர்புடைய இணைப்புகள்

abhishek elimination is fair chinna ponnu exclusive biggbossl

People looking for online information on Abhishek, Abhishek raaja, Abhishek Raja, AbishekRaaja, BiggBossTamil5, Chinna Ponnu, Vijaytv will find this news story useful.