www.garudabazaar.com

குட்டி பத்மினி பதிவு.. "நல்ல குடும்பத்துல பிறந்த எங்களுக்கு எவ்ளோ எரியும்..?" - அபிராமி Reply

முகப்பு > சினிமா செய்திகள்

By |

சென்னை கலாஷேத்ரா அறக்கட்டளை வளாகத்தில் உள்ள ருக்மணி தேவி நுண்கலை கல்லூரியில் மாணவிகளுக்கு பாலியல் தொல்லை அளிக்கப்படுவதாக எழுந்த புகார்கள் பரபரப்பாகி வருகின்றன.

Abhirami and Kutty Padmini talks On Kalakshetra issue

இந்த புகார்கள் குறித்து விசாரணை நடத்தப்பட்டு வரும் நிலையில் இதன் பேரில் சில பேராசிரியர்களை சஸ்பெண்ட் செய்தும் பேராசிரியர் ஹரிபத்மன் என்பவரை  கைது செய்தும் நடவடிக்கை எடுக்கப்பட்டதாக தெரிகிறது. இந்த நிலையில்தான் இந்த விவகாரம் குறித்து பேசிய பிரபல பிக்பாஸ் நடிகை அபிராமி வெங்கடாச்சலம், “பொதுவாகவே எந்த ஒரு கொடுமைகள் நடந்தாலும் யாரும் சொல்லாமல் குரல் கொடுப்பவள் நான். நான் பாதிக்கப்பட்டவர்கள் பக்கம் தான் பேசுவேன். அதேசமயம் நான் கலாஷேத்ராவில் படித்த முன்னாள் மாணவி.

ஒரு பிரச்சனையை ஒரு பக்கம் மட்டுமே இருந்து பார்க்க கூடாது. நான் படித்த வரை எனக்கு எந்த விதமான பாலியல் தொல்லையும் ஏற்பட்டதில்லை. அதே சமயம் இந்த மாணவிகளை அழுத்தம் தந்து இப்படி பேச சொல்வதாக எண்ணுகிறேன். இதே போல் இவர்களை இப்படி பேச சொல்லும் ஆசிரியர்களுக்கும் அழுத்தம் கொடுக்கப்படுவதாக அறிகிறேன்” என்று குறிப்பிட்ட அவர்களின் பெயரை தற்போது பேட்டியில் கூறி இருக்கிறார் நடிகை அபிராமி.

மேலும் பேசியவர், “10 வருடமாக இந்த பிரச்சினை நடக்கிறது என்று சொல்கிறார்கள். நான் அதே 10 வருடத்துக்கு முன்பு இங்கு படித்தவள்தான் என்கிற முறையில் இதை பேசுவது என்னுடைய பொறுப்பு, கலாஷேத்ராவுக்கு களங்கம் விளைவிக்கிறார்கள் எனும்பொழுது நான் குரல் எழுப்புகிறேன், மாணவர்களுடன் நேராக நான் பேச விரும்புகிறேன்” என்று குறிப்பிட்டிருந்தார்.

இந்த நிலையில் பிரபல சீனியர் நடிகை குட்டி பத்மினி அபிராமி குறித்த தமது விமர்சனத்தில், “திரைப்படத்திலிருந்து கொண்டு இப்படி பேசுகிறீர்களே? உங்களுக்கு எதுவும் பீல் ஆகாது. ஆனால் மற்ற பெண்கள் அப்படி இல்லை. அவர்கள் தினசரி சமூகத்தில் வாழ்பவர்கள். அவர்கள் நாளைய சமூகத்தில் ஆசிரியை, ஒரு நல்ல குடும்பத் தலைவி என வாழப்போகிறவர்கள். அவர்களுடைய உணர்வுகளை புரிந்து கொள்ளுங்கள். இது சினிமா ஷூட்டிங் அல்ல. எல்லாவற்றையும் கேமராவில் பதிவு செய்து கொள்ள; எனவே அத்தனைக்கும் ஆதாரம் கேட்பது என்பது சரியானது அல்ல. அந்த கல்லூரியில் படித்ததற்காக இப்படி பேசுவது சரியானதல்ல” என்று குறிப்பிட்டு இருக்கிறார்.

Abhirami and Kutty Padmini talks On Kalakshetra issue

இதற்கு பதில் அளித்த நடிகை அபிராமி, “திரைத் துறையில் இருக்கும் அனைவருமே உங்களை மாதிரி கிடையாது குட்டி பத்மினி ஆன்ட்டி. உங்களுக்கு எதுவும் ஃபீல் ஆகாது என்பது குறித்து எனக்கு மிகவும் வருத்தமாக இருக்கிறது. இன்னொரு விஷயம் சொல்ல வேண்டும் உங்களுக்கே இப்படி பத்திக்கிட்டு வருகிறது என்றால், நல்ல குடும்பத்துல பிறந்த எங்களுக்கு எவ்ளோ எரியும் ஆன்ட்டி! நாங்கள் பார்த்துக் கொள்கிறோம். நீங்கள் இந்த வயதில் உங்கள் உடல் நலத்தை பார்த்துக் கொள்ளுங்கள்!” என்று பதில் கொடுத்து இருக்கிறார். இவர்கள் இருவரின் பேச்சுகளும் பதில்களும் வைரலாகி வருகின்றன.

தொடர்புடைய இணைப்புகள்

Abhirami and Kutty Padmini talks On Kalakshetra issue

People looking for online information on Abhirami, Abhirami Venkatachalam, Bigg boss, Kutty Padmini will find this news story useful.