விஷாலுடன் மோதல்.. வெளியேறிய மிஷ்கின் - துப்பறிவாளனில் நடித்த பிரசன்னா கருத்து.

முகப்பு > சினிமா செய்திகள்

By |

நடிகர் பிரசன்னா, இயக்குநர் மிஷ்கின் மற்றும் விஷால் குறித்து கருத்து தெரிவித்துள்ளார். 

துப்பறிவாளன்-2வில் இருந்து மிஷ்கின் விலகியது குறித்து பிரசன்னா | actor prasanna opens on mysskin vishal and thupparivalan-2

மிஷ்கின் இயக்கத்தில் உருவான திரைப்படம் துப்பறிவாளன். இத்திரைப்படத்தில் விஷால் கதாநாயகனாக நடித்தார். மேலும் பிரசன்னா, வினய், ஆண்ட்ரியா, பாக்யராஜ் உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்தனர். இதையடுத்து இப்படத்தின் இரண்டாம் பாகம் தயாராவதாக அறிவிக்கப்பட்டது. இதனிடையே விஷால் - மிஷ்கின் இருவருக்குள்ளும் கருத்து வேறுபாடு ஏற்பட்டதையடுத்து, படத்தில் இருந்து மிஷ்கின் விலகினார். 

இந்நிலையில் நடிகர் பிரசன்னா இதுகுறித்து கருத்து தெரிவித்துள்ளார். அவர் தனது ட்விட்டர் பக்கத்தில் ரசிகர்களின் கேள்விகளுக்கு பதிலளித்தார். அப்போது, மிஷ்கின் இல்லாமல் துப்பறிவாளன் எப்படி இருக்கும் என ரசிகர் ஒருவரின் கேள்விக்கு, ''துரதிர்ஷ்டவசமாக அவர் இந்த படத்தில் இல்லை. அதற்காக நான் வருந்துகிறேன். அதே நேரம் விஷால் சிறப்பானதை கொடுப்பார் என நம்புகிறேன். அவரிடம் நிருபிக்கபட வேண்டியவை நிறையவுள்ளது'' என தெரிவித்துள்ளார். மிஷ்கின் விலகியதையடுத்து, துப்பறிவாளன்-2 படத்தை விஷால் இயக்கவிருப்பது குறிப்பிடத்தக்கது. 

Entertainment sub editor