'அப்பா... இனி நீங்கள் கால் வலியில் துடிக்க போவதில்லை' - இயக்குநர் மகேந்திரன் மகன் உருக்கம்

முகப்பு > சினிமா செய்திகள்

By |

'முள்ளும் மலரும்', 'உதிரிப்பூக்கள்', 'நெஞ்சத்தை கிள்ளாதே' போன்ற படங்களின் மூலம் மனித உணர்வுகளை காட்சிப்படுத்தியவர் மகேந்திரன். திரைக்கதை, வசனகர்த்தாவாக வலிமைமிகு உரையாடல்களை தந்த அவர், இயக்குநராக எளிமையான காட்சிகளை தந்து வியக்க வைத்தார்.

John Mahendran Tweets emotionally about his father Mahendran

சில நாட்களாக உடல் நிலை சரியில்லாமல் மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவந்த அவர் ஏப்ரல் 2 ஆம் தேதி தனது 79வது வயதில் காலமானார். அவரது உடலுக்கு நடிகர்கள் ரஜினிகாந்த், கமல்ஹாசன், விஜய்சேதுபதி, இயக்குநர் பாரதிராஜா, இசையமைப்பாளர் இளையராஜா உள்ளிட்டோர் நேரில் வந்து அஞ்சலி செலுத்தினர்.

இந்நிலையில் மகேந்திரனின் மகனும் இயக்குநருமான ஜான் மகேந்திரன் தனது ட்விட்டர் பக்கத்தில், அப்பா... இனி நீங்கள் கால் வலியில் துடிக்க போவதில்லை. முதுகு வலியில் கஷ்டப்பட போவதில்லை. ஆனால் வாழ்நாள் முழுவதும் நீங்கள் எங்களுடன் இல்லாத வலியில் நாங்கள் துடிக்க போகிறோம். என்று பதிவிட்டுள்ளார்.