“தனக்கு தானே ஆப்பு வைத்துகிட்ட மனிதர்”! முன்னாள் காதலியை வேவு பார்க்க தோண்டிய குழியில் சிக்கிய காதலன், மீட்ட காதலி!

முகப்பு > செய்திகள் > உலகம்

By Arunachalam | Apr 30, 2019 02:12 PM

முன்னாள் காதலியை உளவு பார்ப்பதற்காக அவரது வீட்டின் அடியில் சுரங்கம் தோண்டி அதில் சிக்கிக்கொண்டவர் போலீசார் உதவியுடன் மீட்கப்பட்டுள்ளார்.

man struck in the hole which he digs to spy his Ex girl friend

மெக்ஸிகோ நாட்டின் போர்டோ பெனாஸ்கோ நகரை சேர்ந்த 50 வயது நபர் ஒருவர், தான் காதலித்த பெண்ணின் வீட்டிற்கு கீழ் அவரை உளவு பார்க்கும் வகையில் கடந்த சில நாட்களாக சுரங்கம் ஒன்றை தோண்டி வந்துள்ளார்.

இந்நிலையில், வீட்டில் ஏதோ வினோதமான சத்தம் ஏற்படுவதை கேட்ட அப்பெண் பூனையாக இருக்கும் என்று எண்ணி கண்டுகொள்ளாமல் விட்டுவிட்டார். பின்னர் நாளடைவில் அந்த சப்தம் அதிகரிக்கவே அந்த பகுதியில் சென்று பார்த்த போது 14 ஆண்டுகளுக்கு முன்னர் தான் காதலித்த நபர் அந்த சுரங்கத்திற்குள் இருப்பதை கண்டு அதிர்ச்சியடைந்தார்.

இதையடுத்து காவல்துறையினருக்கு அவர் தகவல் தெரிவித்ததன் பேரில் அங்கு வந்த காவல்துறையினர் சுரங்கத்திற்குள் மிகவும் சோர்வான நிலையில் மயங்கி கிடந்த அந்த நபரை மீட்டு வெளியே கொண்டுவந்துள்ளனர்.

சுரங்கத்தில் இருந்து மீட்ட நபர் தனது முன்னாள் காதலர் என்றும் பொறாமை குணம் மிகுதியாக கொண்டிருந்ததால் 14 ஆண்டுகளுக்கு முன்னர் அவரை பிரிந்ததாகவும். குடும்ப வன்முறை பிரிவின் கீழ் அப்பெண்ணிடம் இருந்து தள்ளியே இருக்க வேண்டும் என்று நீதிமன்றமே உத்தரவிட்டிருந்ததும் பின்னர் தெரியவந்ததுள்ளது.

இந்நிலையில், நீதிமன்ற உத்தரவை பின்பற்றாமல் அப்பெண்ணிற்கு தொல்லை கொடுத்ததற்காக காவல்துறை அந்த நபரை கைது செய்துள்ளது.

Tags : #MEXICO #EX LOVERS #SPY