'தேனிலவு போன இடத்தில் நடந்த துயரம்'... 'தவித்து நிற்கும் பெண்ணின் பெற்றோர்'... 'திடீரென ஆண் நண்பரோடு திருமணம்'...விலகாத மர்மம்!

முகப்பு > செய்திகள் > உலகம்

By Jeno | Nov 14, 2020 12:19 PM

கடந்த 10 வருடங்களுக்கு முன்பு தேனிலவுக்குச் சென்ற இடத்தில் மணப்பெண்ணுக்கு நடந்த துயரம் குறித்த மர்மம் இன்னும் விலகாமல் உள்ளது.

Anni\'s family held a memorial service to mark her murder 10 years ago

இந்திய வம்சாவளியைச் சேர்ந்த இளம்பெண் அன்னி திவானி. இவருக்கும் இங்கிலாந்தில் வசிக்கும் ஷரின் திவானி என்ற இளைஞருக்கும் கடந்த 10 வருடங்களுக்கு முன்பு திருமணம் நடைபெற்றது. திருமணம் முடிந்த கையேடு புதுமண தம்பதிகள் தென்னாப்பிரிக்காவிற்குத் தேனிலவு செல்ல முடிவு செய்து அங்கு சென்றனர். ஆயிரம் கனவுகளோடு கணவரோடு காரில் பயணித்துக் கொண்டிருந்த அன்னி திவானிவின் சந்தோசம் சில மணி நேரம் கூட நீடிக்கவில்லை.

Anni's family held a memorial service to mark her murder 10 years ago

தம்பதியர் சென்ற காரை திடீரென வழிமறித்த மர்ம கும்பல் புதுமண பெண் அன்னி திவானியைக் கடத்தி சென்றனர். பின்னர் அன்னி திவானி சடலமாக மீட்கப்பட்டார். இதனிடையே இந்த சம்பவத்தில் தொடர்புடைய 3 பேரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வந்தார்கள். அப்போது அவர்கள் அளித்த வாக்குமூலம் கடும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. தேனிலவுக்கு மனைவியுடன் வந்த ஷரின் திவானி தான் தங்களுக்குக் காசு கொடுத்து தனது மனைவியைக் கொலை செய்யக் கூறியதாக வாக்குமூலம் அளித்தார்கள்.

Anni's family held a memorial service to mark her murder 10 years ago

ஆனால் அது தொடர்பான ஆதாரங்கள் எதுவும் இல்லாததால், ஷரின் திவானி வழக்கிலிருந்து விடுவிக்கப்பட்டார். இந்த சம்பவங்கள் எல்லாம் நடந்து முடிந்த பின்னர் தான் ஷரின் திவானியின் இரட்டை வாழ்க்கை வெளிச்சத்திற்கு வந்தது. ஷரின் திவானி ஒரு ஓரினசேர்கையாளர். இந்த வழக்கிலிருந்து ஷரின் விடுவிக்கவைப்பதையடுத்து தனது ஆண் நண்பரைத் திருமணம் செய்து கொண்டு தனது புது வாழ்க்கையை வாழ ஷரின் திவானி தொடங்கி விட்டார்.

Anni's family held a memorial service to mark her murder 10 years ago

இந்நிலையில் அன்னி திவானி இறந்து 10 ஆண்டுகள் ஆன நிலையில், அவரது நினைவு நாளை ஸ்வீடனில் வசிக்கும் அவரது உறவினர்கள் அனுசரித்தனர். இதனிடையே லண்டனில் வசிக்கும் ஷரின் திவானி தனது வீட்டிலிருந்து வெளியே செல்லும் போது, அவரது மனைவி குறித்து ஒரு ஊடகவியலாளர் கேட்டபோது அதுகுறித்து எதுவும் கூறாமல், வானத்தை அண்ணாந்து பார்த்து விட்டுச் சென்று விட்டார்.

Anni's family held a memorial service to mark her murder 10 years ago

ஆனால் ஸ்வீடனில் வசிக்கும் அன்னி திவானியின் பெற்றோர் தங்கள் மகளுக்கு என்ன நடந்தது என்பது குறித்து எதுவும் தெரியாமல் இன்னும் வேதனையை அனுபவித்து வருகிறார்கள். மகளை இழந்த வலி என்னவென்பது எங்களுக்கு மட்டும் தான் தெரியும். அதிலும் 10 வருடங்களாக அந்த வேதனையை அனுபவித்து வருகிறோம் என அன்னியின் பெற்றோர் கூறியுள்ளார்கள்.

Anni's family held a memorial service to mark her murder 10 years ago

இதுகுறித்து பேசிய அன்னி திவானியின் உறவினர், ''அன்று அன்னி திவானிக்கு என்ன நடந்தது என்பது ஷரினுக்கு மட்டுமே தெரியும். ஆனால் அவர் இதுவரை அதுகுறித்து எதுவும் பேசவில்லை. அவர் தனது புது வாழ்க்கையைத் தொடங்கி அதில் சென்று கொண்டு இருக்கிறார். ஆனால் அன்னிக்கு என்ன நடந்தது என்பது குறித்து ஷரின் பேசாதவரை அதிலிருக்கும் மர்மம் மட்டும் விலகாது'' என வேதனையுடன் குறிப்பிட்டுள்ளார்.

Anni's family held a memorial service to mark her murder 10 years ago

மற்ற செய்திகள்

ABOUT THIS PAGE

This page contains news relating to various facts and events. The views are generally about current affiars and general topics in diversified areas such as political, international, national, and regional issues, sports, health, travel, lifestyle, technology and business. People having similar interets on the above topics will find this page useful. Anni's family held a memorial service to mark her murder 10 years ago | World News.