'டிவி பார்க்கலாமான்னு சும்மா பேச்சு கொடுத்தேன்...' 'கதவை சாத்திட்டு தப்பா நடக்க முயற்சி பண்ணினேன், அப்போ...' பாலியல் குற்றவாளியின் அதிர வைக்கும் வாக்குமூலம்...!

முகப்பு > செய்திகள் > தமிழகம்

By Issac | Mar 22, 2020 09:06 AM

10 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கிய இளைஞரின் வாக்குமூலம் தமிழ்நாட்டு மக்களை மேலும் கோபமடைய செய்துள்ளது.

The shocking confession of the sex offender who murdered the girl

நேற்று காலையில் இந்திய மக்கள் அனைவரும் நிர்பயா பாலியல் வன்கொடுமை வழக்கில் குற்றவாளிகளுக்கு தூக்குதண்டனை கொடுத்த மகிழ்ச்சியில் இருந்த சமயத்தில் சென்னையில் 8 வயது சிறுமி பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கி 3 மாடியிலிருந்து தூக்கி எரிந்த சம்பவம் தமிழ்நாட்டு மக்களை கடும் கோவத்திலும், சோகத்திலும் அழுத்தியது.

சென்னை மதுரவாயல் மேட்டுக்குப்பம் பகுதியில் குடியிருக்கும் ராஜஸ்தானை சேர்ந்தவரின் 10 வயது மகளை பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கி கொலை செய்துள்ளார் சுரேஷ்.

திண்டிவனத்தை சேர்ந்த சென்ட்ரிங் தொழிலாளியான சுரேஷ் என்பவர் அந்த குடியிருப்பின் 2வது தளத்தில் மனைவி என்று கூறிக் கொண்டு ஒரு பெண்ணுடன் வசித்துள்ளார்.

நேற்று முன்தினம் இரவு இயற்கை உபாதையை கழிப்பதற்காக வீட்டிற்கு வெளியே இருந்த கழிப்பறைக்கு  சென்ற சிறுமியை அவருடைய வீட்டிற்கு அழைத்து சென்று பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கி 3 மாடியிலிருந்து வீசியுள்ளார். இந்த வழக்கில் மதுரவாயல் போலீஸ் இன்ஸ்பெக்டர் ராதாகிருஷ்ணன் தலைமையிலான போலீஸார் சிறுமி கொலை செய்யப்பட்ட சில மணி நேரத்திலேயே சுரேஷ் (29) என்பவரைக் கைது செய்துள்ளனர்.

தற்போது அவ்வழக்கில் கைது செய்யப்பட்ட குற்றவாளி சுரேஷ் என்பவர் போலீசார் விசாரணையில் தனது வாக்குமூலத்தை கொடுத்துள்ளார்.

அதாவது "நேற்று இரவு எனக்கு தூக்கம் வரவில்லை. அதனால் என் வீட்டிற்கு வெளியே நின்று செல்போனில் படம் பார்த்துக் கொண்டிருந்தேன். அப்போ அந்த சிறுமி தனியாக மாடியிலிருந்து கழிவறை வந்ததைப் பார்த்தேன். உடனே அவளை அழைத்து சும்மா பேச்சுக்கொடுத்தேன். டி.வி பார்க்கலாமா என்று கேட்டேன் அவள் சரி சொல்லவே சிறுமியை என்னுடைய வீட்டுக்குச் சிறுமியை அழைத்துச் சென்றேன்.

வீட்டிற்குள் வந்ததும் கதவை மூடிவிட்டு சிறுமியிடம் தவறாக நடக்க முயன்றேன். உடனே சிறுமி கூச்சலிட ஆரம்பித்துவிட்டாள். அதனால் அவள் வாயை மூடினேன். இதில் மூச்சுத்திணறி அவள் மயங்கிவிட்டாள். சிறுமி மயக்கம் தெளிந்த பின் என்னை காட்டி கொடுத்து விடுவாள் என்று பயந்து மயங்கிய நிலையில் இருந்த சிறுமியை மூன்றாவது மாடிக்கு தூக்கி கொண்டு சென்று தூக்கிக் கீழே வீசினேன். அதன் பின் யாருக்கும் தெரியாதவாறு என் வீட்டிற்குள் வந்து படுத்துக்கொண்டேன் ஆனால் தூக்கம் வரவில்லை' என்று கூறினார்.

இதையடுத்து சுரேஷ் அளித்த வாக்குமூலத்தின் அடிப்படையில் அவரைக் கைது செய்து சிறையில் அடைத்தோம்" என்றனர் போலீசார்.

Tags : #CONFESSION