'இனிமேல் வாரத்தின் 6 நாட்கள் ஸ்கூல் இருக்கு'... பள்ளிகள் திறப்பு தொடர்பான விரிவான வழிகாட்டு நெறிமுறைகள்!

முகப்பு > செய்திகள் > தமிழகம்

By Jeno | Jan 13, 2021 03:33 PM

பள்ளிகள் திறப்பு தொடர்பான விரிவான வழிகாட்டு நெறிமுறைகளைத் தமிழக அரசு வெளியிட்டுள்ளது.

Tamilnadu Govt released the regulations for reopening the school

கொரோனா நோய் பரவல் காரணமாகப் பள்ளிகள் கடந்த மார்ச் மாதம் 3-வது வாரம் முதல் மூடப்பட்டு இருக்கின்றன. 2020-21-ம் கல்வியாண்டுக்கான வகுப்புகள் ஆன்லைன், கல்வி தொலைக்காட்சி, நடத்தப்பட்டு வருகின்றன. இதற்கிடையில் 9, 10, 11, மற்றும் 12-ம் வகுப்பு மாணவர்களுக்கு மட்டும் பள்ளிகளைத் திறப்பது பற்றி அரசு ஆலோசித்து வந்தது.

கடந்த ஆண்டு நவம்பர் மாதம் 16-ந்தேதி முதல் பள்ளிகளைத் திறக்க திட்டமிட்டு, இதற்காகப் பெற்றோரிடம் கருத்துகளும் கேட்கப்பட்டன. அதில் ஒரு சாரார் பள்ளிகளைத் திறக்கலாம் என்றும், மற்றொரு சாரார் திறக்க வேண்டாம் என்று கருத்துகள் தெரிவித்ததாலும், கல்வியாளர்கள் சிலர் எதிர்ப்பு கருத்துகள் கூறி வந்ததாலும் பள்ளிகள் திறக்கும் முடிவை அரசு ஒத்திவைத்தது.

இதனிடையே கொரோனா நோய்த்தொற்றின் தாக்கம் தற்போது சற்று குறைந்திருக்கும் சூழ்நிலையில், பொதுத்தேர்வு எழுத இருக்கும் 10, 12-ம் வகுப்பு மாணவர்களுக்கு மட்டும் பொங்கல் விடுமுறைக்குப் பிறகு பள்ளிகளைத் திறக்கலாமா? என்பது குறித்துப் பெற்றோரிடம் மீண்டும் கருத்துகள் கேட்கப்பட்டது.

Tamilnadu Govt released the regulations for reopening the school

அதில் பெருவாரியான கருத்துகள் பள்ளிகளைத் திறக்க வேண்டும் என்பதை வலியுறுத்தியதையடுத்து பள்ளிகளைத் திறக்க அரசு முடிவு செய்துள்ளது. இந்தநிலையில் 10, 12-ம் வகுப்பு மாணவர்களுக்கு வருகிற 19-ந்தேதி முதல் பள்ளிகள் திறக்கப்படும் என்று முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி அறிவித்தார். இதையடுத்து பள்ளிகளுக்கு நிலையான வழிகாட்டு நெறிமுறைகளைத் தமிழக அரசு வெளியிட்டுள்ளது.

அதில்,

  • பள்ளிக்கு வரும் மாணவர்கள் பெற்றோரிடம் கடிதம் பெற்று வரவேண்டும்.
  • தனியார்ப் பள்ளிகள் திறப்பதற்கு முன் அனுமதி பெற வேண்டும்.
  • வகுப்பறைக்கு உள்ளே, வெளியே முகக்கவசம் அணிவது கட்டாயம்.
  • வாரத்தின் ஆறு நாட்கள் பள்ளிகள் செயல்படும்.
  • ஆன்லைன் வகுப்புகள் தொடர்ந்து நடைபெறும்.
  • 10 மற்றும் 12-ஆம் வகுப்பு மாணவர்கள் விரும்பினால் பள்ளிக்கு வரலாம்.
  • பெற்றோரின் சம்மதத்துடன் மாணவர்கள் வீட்டிலிருந்தே படிக்கலாம்.
  • மாணவர்களின் வருகையைக் கட்டாயப்படுத்தக் கூடாது.
  • இவ்வாறு அரசு வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மற்ற செய்திகள்

தொடர்புடைய செய்திகள்

ABOUT THIS PAGE

This page contains news relating to various facts and events. The views are generally about current affiars and general topics in diversified areas such as political, international, national, and regional issues, sports, health, travel, lifestyle, technology and business. People having similar interets on the above topics will find this page useful. Tamilnadu Govt released the regulations for reopening the school | Tamil Nadu News.