“ஆடு மேய்க்குறதுதான் தொழில்!”.. குரூப்-4 தேர்வில் வென்று தமிழகத்தையே திரும்பிப் பார்க்க வைத்த திருவராஜ்!

முகப்பு > செய்திகள் > தமிழகம்

By Siva Sankar | Jan 10, 2020 02:52 PM

அண்மையில் நடந்து முடிந்த குரூப் 4  தேர்வில், சிவகங்கை மாவட்டம் பெரிய கண்ணனூர் கிராமத்தை சேர்ந்த திருவராஜு என்பவர்  மாநில அளவில் முதலிடம் பிடித்துள்ளார்.

Sivagangai shepherd cracks TNPSC Group 4 exams

இளையான்குடி மற்றும் சிவகங்கை நகரத்தில் இருந்து ராமேஸ்வரத்திற்கு சென்று குரூப் 4 தேர்வு எழுதி முதலிடம் பிடித்துள்ள, 46 வயதான திருவராஜுக்கு, விஜயா என்ற மனைவியும் 2 பெண் குழந்தைகளும் உள்ள நிலையில், பட்டப்படிப்பு முடித்துள்ள இவர், கிராமத்தில் ஆடு மேய்த்துக்கொண்டே, குரூப் 4 தேர்வுக்கு தயாராகி வந்துள்ளார். இதனிடையே இத்தேர்வில் முறைகேடு நடந்துள்ளதாக எழுந்துள்ள குற்றச்சாட்டை அடுத்து, முதலிடம் பிடித்த 35 பேரை நேரில் ஆஜராகுமாறு டிஎன்பிஎஸ்சி உத்தரவிட்டுள்ளது.

இதுபற்றி பேசிய திருவராஜ், ஏழை விவசாயக் குடும்பத்தில் பிறந்த, தான் முதல் முயற்சிலேயே குரூப் 4 தேர்வில் வெற்றி பெறவில்லை என்றும் 7 முறை தேர்வெழுதி தோல்வியடைந்து, பின்னர் தன்னுடைய கடின உழைப்பின் மூலம் 8-வது முறையாக தான் வெற்றி பெற்றிருப்பதாகவும் தெரிவித்துள்ளார். மேலும் இத்தேர்வில் எவ்வித முறைகேடும் நடக்கவில்லை என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

Tags : #TNPSC