பொள்ளாச்சி பாலியல் விவகாரம்: 5 -வது நபர் கைது.. சிபிசிஐடி போலிஸார் அதிரடி!

முகப்பு > செய்திகள் > தமிழகம்

By Selvakumar | Apr 10, 2019 04:14 PM

பொள்ளாச்சி பாலியல் வழக்கில் ஐந்தாவதாக ஒரு நபரை போலிஸார் கைது செய்துள்ளனர்.

Another person arrested in pollachi case

கோவை மாவட்டம் பொள்ளாச்சியில் முகநூல் மூலமாக பழகி, 200 -க்கும் மேற்பட்ட பெண்களை பாலியல் வன்கொடுமை செய்து அதனை வீடியோ எடுத்து மிரட்டிய சம்பவம் தமிழகத்தையே உலுக்கியது. இதில் பாதிக்கப்பட்ட பெண் ஒருவர் அளித்த புகாரின் அடிப்படையில் திருநாவுக்கரசு, வசந்தக்குமார், சபரிநாதன், சதீஷ் ஆகிய நால்வரை காவல் துறையினர் கைது செய்தனர்.

இதனை அடுத்து கைது செய்யப்பட்டவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டுமென கல்லூரி மாணவர்கள், அரசியல் தலைவர்கள் உள்ளிட்ட அனைவரும் தமிழகம் முழுவதும் போராட்டங்களை நடத்தினர். இதனை அடுத்து இவர்கள் நால்வர் மீதும் குண்டர் சட்டம் சுமத்தப்பட்டது. மேலும் இவ்வழக்கு சிபிசிஐடி போலிஸாருக்கு மாற்றப்பட்டது.

இந்நிலையில் இந்த விவகாரம் தொடர்பாக இந்தாவதாக மணிவண்ணன் என்ற நபரை போலிஸார் கைது செய்துள்ளனர். மேலும் இதுவரை நடத்தப்பட்ட விசாரணை குறித்த அறிக்கையை சீலிட்ட கவரில் சிபிசிஐடி போலிஸார் சென்னை உயர்நீதிமன்றத்தில் தாக்கல் செய்துள்ளனர்.

Tags : #POLLACHIASSAULTCASE