கல்யாணம் ஆனவங்கன்னா 1 தான்.. பேச்சுலர்னா 2 இலவசம்.. வித்தியாசமாக யோசித்த மாப்பிள்ளை வீட்டார்.. கேட்டா ‘ஷாக்’ ஆகிடுவீங்க..!
முகப்பு > செய்திகள் > தமிழகம்திருமண விழாவில் மதுபானம் இலவசமாக கொடுக்கப்படும் என பேனர் வைக்கப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
![Alcohol and chicken free at wedding function in Sivaganga Alcohol and chicken free at wedding function in Sivaganga](http://tamil.behindwoods.com/news-shots-tamil-news/images/tamilnadu/alcohol-and-chicken-free-at-wedding-function-in-sivaganga.jpg)
சிவகங்கை அருகே கீழகண்டனி கிராமத்தில் ஜெயமுத்து-சரண்யா ஆகியோர் திருமண வரவேற்பு நிகழ்ச்சி நடைபெற்றுள்ளது. அப்போது இதற்காக வைக்கப்பட்ட பேனரில், ‘திருமணத்திற்கு வருபவர்களுக்கு குவாட்டரும், சிக்கனும் இலவசம்’ என்று குறிப்பிட்டிருந்துள்ளனர்.
மேலும், அதில் திருமணம் ஆனவர்கள் என்றால் ஒரு குவாட்டரும் சிக்கனும் இலவசம் என்றும், திருமணம் ஆகதாவர்களுக்கு இரண்டு குவாட்டரும் சிக்கனும் இலவசமாக கொடுக்கப்படும் என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது. அதற்க்கு ஆதார் கார்டு கட்டாயம் என்றும் குறிப்பிட்டு இருந்தனர்.
அதன்படி திருமணத்திற்கு வந்த உறவினர்கள் மற்றும் நண்பர்களின் ஆதார் கார்டை வாங்கி பார்த்து விதிமுறை படி குவாட்டர்களை கொடுத்து குடிமகன்களை குஷி படுத்தியுள்ளனர். இவர்களது வித்தியாசமான முயற்சி குடிமகன்களை குஷிபடுத்தினாலும், குடும்பத்துடன் வந்தவர்கள் மொய் செய்து, ஏக்கத்துடன் சென்றனர்.
இந்த சம்பவம் வைரலான நிலையில், இது மது குடிப்பதை ஊக்கப்படுத்துவது போல் உள்ளதாக சமூக ஆர்வலர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.
![](https://www.behindwoods.com/images/spacer.gif)
மற்ற செய்திகள்
![](https://www.behindwoods.com/images/spacer.gif)