ஃபைனல் மேட்ச்ல ஹர்திக் பாண்ட்யா பவுலிங் போடுறாரா...? - கேப்டன் ரோஹித் ஷர்மா பதில்...!

முகப்பு > செய்திகள் > விளையாட்டு

By Behindwoods News Bureau | Nov 10, 2020 05:24 PM

மும்பை இந்தியன்ஸ் அணியின் வேகப்பந்து வீச்சாளர் மற்றும் ஆல்-ரவுண்டர் ஹர்திக் பாண்ட்யா இன்றைய டெல்லி கேப்பிட்டல்ஸ் அணிக்கு எதிராக ஆடும் தொடரில் பந்து வீசுவார என ரசிகர்கள் எதிர்பார்த்து காத்துக்கொண்டுள்ளனர்.

Rohit Sharma explains why hardik Pandya did not bowl

இந்நிலையில் இதற்கு பதிலளித்துள்ள மும்பை இந்தியன்ஸ் அணியின் ரோஹித் சர்மா, 'சில நாட்களுக்கு முன் ஏற்பட்ட காயத்தால் ஹர்திக் பாண்ட்யா அறுவை சிகிச்சை மேற்கொண்டுள்ளார். சிகிச்சைக்கு பின் இந்த வருட ஐ.பி.எல் கிரிக்கெட் தொடரில் தான் முதன்முதலில் பங்குகொள்கிறார்.

அவர் பந்து வீசினால் நன்றாக இருக்கும் அணிக்கு கூடுதல் பலம் இருக்கும். இந்தத் தொடர் முழுவதும் அவரது உடல்நிலையை பாதுகாத்து கொள்ளும் வகையில் பந்து வீசும் வாய்ப்பை அளிக்காமல் உள்ளோம். அவர் சிறப்பாக பேட்டிங் பணியை செய்து வருகிறார். இதுவே தொடரட்டும் எனத்தான் நாங்கள் முடிவு செய்துள்ளோம்.

நாங்கள் ஒரு வீரர் மீது அதிகப்படியான நெருக்கடியை கொடுக்க விரும்பமாட்டோம். ஒருவரிடமிருந்து எதிர்பார்க்கும் போது அதை அவர் செய்யவில்லை என்றால், அணியின் பலம் மற்றும் கூட்டுசெயல்பாடு குறைந்து விடும். எங்கள் அணியில் இவ்வாறான சூழல் வருவதை நாங்கள் விரும்பவில்லை' எனக்கூறியுள்ளார்.

மற்ற செய்திகள்

ABOUT THIS PAGE

This page contains news relating to various facts and events. The views are generally about current affiars and general topics in diversified areas such as political, international, national, and regional issues, sports, health, travel, lifestyle, technology and business. People having similar interets on the above topics will find this page useful. Rohit Sharma explains why hardik Pandya did not bowl | Sports News.