RRR Others USA

இது யாருமே எதிர்பார்க்காத ‘ஷாக்’.. சிஎஸ்கே கேப்டன் பதவியில் இருந்து விலகிய ‘தல’ தோனி.. புது கேப்டன் யார் தெரியுமா?

முகப்பு > செய்திகள் > விளையாட்டு

By Selvakumar | Mar 24, 2022 03:09 PM

சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கு ஜடேஜா புதிய கேப்டனாக நியமிக்கப்பட்டுள்ளதாக அதிகாரபூர்வ தகவல் வெளியாகியுள்ளது.

MS Dhoni hands over CSK captaincy to Jadeja

ஐபிஎல் தொடரின் 15-வது சீசன் வரும் 26-ம் தேதி மும்பை வான்கடே மைதானத்தில் நடைபெற உள்ளது. இதன் முதல் போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியும், கொல்கத்தா நைட்ரைடர்ஸ் அணியும் மோதவுள்ளன. நீண்ட நாட்களுக்கு பிறகு தோனி விளையாட உள்ளதால், ரசிகர்கள் ஆவலுடன் காத்துள்ளனர்.

இந்த நிலையில் சிஎஸ்கே அணியின் கேப்டன் பதவியில் இருந்து தோனி விலகியுள்ளதாக அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகி உள்ளது. இதனை அடுத்து ஆல்ரவுண்டர் ஜடேஜா, சிஎஸ்கே அணிக்கு புதிய கேப்டனாக நியமிக்கப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

MS Dhoni hands over CSK captaincy to Jadeja

ஐபிஎல் மெகா ஏலத்திற்கு முன்பு ஜடேஜாவை சிஎஸ்கே அணி ரூ. 16 கோடிக்கு தக்க வைத்தது. தோனியை விடவும் அதிக விலைக்கு இவர் தக்க வைக்கப்பட்டார். தோனிக்கு பின்பு சிஎஸ்கே அணியின் கேப்டனாக யார் வருவார் என்று கேள்விகள் எழுந்து வந்தன.

இந்த சூழலில் ஜடேஜா சிஎஸ்கே அணிக்கு கேப்டனாக நியமிக்கப்பட்டுள்ளதாக அறிவிப்பு வெளியாகி உள்ளது. மேலும் தோனி, அணியில் ஒரு வீரராக தொடர்வார் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. முன்னதாக சிஎஸ்கே அணியின் முன்னாள் வீரர் சுரேஷ் ரெய்னா, தோனிக்கு பின்பு ஜடேஜா கேப்டனாக வர வாய்ப்பு உள்ளதாக கூறினார் என்பது குறிப்பிடத்தக்கது.

மற்ற செய்திகள்

தொடர்புடைய செய்திகள்

ABOUT THIS PAGE

This page contains news relating to various facts and events. The views are generally about current affiars and general topics in diversified areas such as political, international, national, and regional issues, sports, health, travel, lifestyle, technology and business. People having similar interets on the above topics will find this page useful. MS Dhoni hands over CSK captaincy to Jadeja | Sports News.