'அம்மா சம்மதிக்கல டா, நாம பிரேக் அப் பண்ணிக்கலாம்'... 'நோ, காதலை விட மறுத்த இளைஞர்'... ஆத்திரத்தில் செய்த பகீர் சம்பவம்!

முகப்பு > செய்திகள் > இந்தியா

By Ajith | Feb 05, 2021 06:26 PM

தன்னுடனான காதலை இளம்பெண் முறித்துக் கொண்டதால், பதிலுக்கு இளைஞர் செய்த செயல் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

bengaluru man sets ex girlfriend scooter on fire

பெங்களூரை அடுத்த வித்யரன்யபுரா என்னும் பகுதியைச் சேர்ந்த இளம்பெண் ஒருவர், சஞ்சய் என்ற இளைஞரை காதலித்து வந்துள்ளார். இந்நிலையில், இவர்களின் காதலுக்கு இளம்பெண்ணின் தாயார் எதிர்ப்பு தெரிவித்ததாக கூறப்படுகிறது.

இதனால், கடந்த ஆண்டே அந்த இளம்பெண், சஞ்சயுடனான காதலை முறித்துக் கொண்டுள்ளார். அவருடன் பேசுவதையும் தவிர்த்து வந்துள்ளார். ஆனாலும், சஞ்சய் விடாமல் தன்னைக் காதலிக்கும் படி, இளம்பெண்ணை மிரட்டி வந்துள்ளார். இருந்த போதும், அவர் கேட்காததால் இன்னும் வெறுப்பான சஞ்சய், கடந்த ஜனவரி மாதம் 12 ஆம் தேதி, நேராக இளம்பெண்ணின் வீட்டிற்குச் சென்று, அந்த பெண்ணையும், அவரின் தாயாரையும் கொன்று விடுவதாக மிரட்டியுள்ளார்.

அப்போது, அந்த இளம்பெண் அவரிடம் பேச மறுத்த நிலையில், உடனடியாக தனது வீட்டில் இருந்து கிளம்ப வேண்டும் எனவும் சஞ்சயிடம் தெரிவித்துள்ளார். இதனிடையே, ஒன்றிரண்டு தினங்களுக்கு முன், அந்த இளம்பெண்ணின் வீட்டின் முன் நின்று கொண்டிருந்த ஸ்கூட்டர் திடீரென தீப்பிடித்து எரிந்துள்ளது.

இதுகுறித்து சிசிடிவியில் ஆராய்ந்து பார்த்த போது, இளம்பெண்ணிற்கு மேலும் அதிர்ச்சி காத்திருந்தது. சஞ்சய், தனது வண்டியில் பெட்ரோல் ஊற்றி தீ வைப்பதை சிசிடிவி மூலம் தெரிந்து கொண்ட இளம்பெண், சஞ்சயின் தொந்தரவு தாங்காமல், போலீஸ் நிலையத்தில் தனது முன்னாள் காதலர் மீது புகாரையும் அளித்துள்ளார். தொடர்ந்து, போலீசார் இந்த சம்பவம் தொடர்பாக விசாரணையை மேற்கொண்டு வருகின்றனர்.

மற்ற செய்திகள்

ABOUT THIS PAGE

This page contains news relating to various facts and events. The views are generally about current affiars and general topics in diversified areas such as political, international, national, and regional issues, sports, health, travel, lifestyle, technology and business. People having similar interets on the above topics will find this page useful. Bengaluru man sets ex girlfriend scooter on fire | India News.