'கடைசி 3 மணிநேரத்தில் புக் செய்தால்'... அதிரடி ஆஃபர்... பிரபல 'விமான நிறுவனம்'!

முகப்பு > செய்திகள் > இந்தியா

By Sangeetha | May 10, 2019 07:02 PM

விமானம் புறப்படும் கடைசி 3 மணி நேரத்தில் புக் செய்யும் டிக்கெட்களுக்கு, அதிக தள்ளுபடியை மத்திய அரசின் கட்டுப்பாட்டின் கீழ் இயங்கி வரும் ஏர் இந்தியா விமான நிறுவனம் அறிவித்துள்ளது.

Air India to offer 40% discount on last minute flight tickets

ஜெட் ஏர்வேஸ் நிறுவனம் விமான சேவை முடங்கியதை அடுத்து, ஏர் இந்தியா நிறுவனம் விமான பயணிகளைக் கவருவதற்காக கடைசி நிமிட கட்டணத் தள்ளுபடிகளை அறிவித்துள்ளது. இது அவசரமாக பயணம் செய்ய வேண்டும் என்று நினைக்கும் பயணிகளுக்கு பெரும் உதவிகரமாக இருக்கும். இதுதொடர்பாக அறிவிப்பு வெளியிட்டுள்ள ஏர் இந்தியா, உள்நாட்டு விமானச் சேவையில் கடைசி 3 மணி நேரத்தில் பயணிகள் டிக்கெட் புக் செய்தால் பெரும் தள்ளுபடி வழங்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

வழக்கமாக கடைசி நிமிட புக்கிங்கில் உண்மையான விலையை விட இரண்டு மடங்கு அதிக கட்டணம் வசூலிக்கப்படுவது உண்டு. ஆனால் தற்போது 40 சதவிகிதம் தள்ளுபடியில் டிக்கெட் புக் செய்யலாம் எனக் கூறப்படுகிறது. இதுகுறித்து விமான நிறுவன செய்தித் தொடர்பாளர் கூறுகையில், 'கடைசி நிமிட பயண முடிவு என்பது மிகவும் அவசரமான, அத்தியாவசியமான ஒன்றாக இருக்கும். அவர்களுக்கு அதிக விலை நிர்ணயம் செய்தால், மிகுந்த பாதிப்பாக இருக்கும். இந்த முடிவு ஏர் இந்திய தலைமையகத்தில் இன்று நடைபெற்ற ஆய்வுக் கூட்டத்தில் எடுக்கப்பட்டது' என்று தெரிவித்துள்ளார்.

ஏர் இந்தியாவின் இந்தச் சலுகை விலை டிக்கெட்கள் அதிகாரப்பூர்வ இணையதளம், மொபைல் செயலி மற்றும் விமான டிக்கெட் ஏஜெண்ட் மூலமாகப் பெறலாம் என்றும் தெரிவித்துள்ளனர். இதன்மூலம் அவரசர நிலை மற்றும் திடீரென டிக்கெட் முன்பதிவு செய்யும் பயணிகள் பயனடைவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.

Tags : #AIRINDIA #OFFER #DISCOUNTS