''இனி ஒரு உசுரு போகக்கூடாது..'' - யோகிபாபு உருக்கமான வேண்டுகோள்.! முழு வீடியோ உள்ளே.

முகப்பு > சினிமா செய்திகள்

By |

நடிகர் யோகிபாபு கொரோனா வைரஸ் பாதுகாப்பு குறித்து கருத்து தெரிவித்துள்ளார். 

கொரோனா வைரஸ் பாதுகாப்பு யோகி பாபு கருத்து | yogi babu's emotional request on coronavirus safety issue

உலகம் முழுவதும் தற்போது கரோனா வைரஸ் குறித்த அச்சம் பரவி வருகிறது. இதையடுத்து இந்தியாவிலும் அது எதிரொலித்துள்ளது. பாதுகாப்பு நடவடிக்கையாக பல்வேறு ஊர்களில் ஊரடங்கு உத்தரவு போடப்பட்டுள்ளது. இதையடுத்து பொதுமக்கள் யாரையும் அவசியமில்லாமல் வெளியில் வர வேண்டாம் என போலீஸ் தரப்பில் அறிவுறுத்தப்பட்டு வருகிறது.

இந்நிலையில் நடிகர் யோகிபாபு இதுகுறித்து ஒரு வீடியோவை வெளியிட்டுள்ளார். இனி கொரோனாவால் ஒரு உயிரும் போகாமல் இருக்க, நாம் அனைவரும் ஊரடங்கு உத்தரவை மதித்து நடக்க வேண்டும் என தெரிவித்துள்ளார். மேலும் தான் வணங்கும் இறைவன் கொரோனாவில் இருந்து மக்களை காப்பாற்ற வேண்டுவதாகவும் அவர் உருக்கமான வீடியோவை வெளியிட்டுள்ளார்.

 

Entertainment sub editor