கொரோனா - சிவகார்த்திகேயன் பட டயலாக் செம மேட்ச் - சுட்டிக்காட்டிய கலெக்டர்

முகப்பு > சினிமா செய்திகள்

By |

கொரோனா எதிர்ப்பு நடவடிக்கைகளில் ஒன்றாக திருப்பூரில் கிருமிநாசினி சுரங்கம் அமைக்கப்பட்டது. இந்த சுரங்கத்தின் வழியே சென்று வந்தால் கிருமி நாசினி நம் மீது தெளிக்கப்படும். இதுகுறித்து தனது ட்விட்டர் பக்கத்தில் திருப்பூர் மாவட்ட ஆட்சியர் விஜயகார்த்திகேயன் வீடியோவாக வெளியிட்டிருந்தார்.

இதனையடுத்து திருப்பூர் மாவட்ட ஆட்சியர் விஜயகார்த்திகேயனின் செயலுக்கு பல்வேறு தரப்பினரும் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர். அதன் ஒருபகுதியாக நடிகர் சிவகார்த்திகேயன் கிரேட் பிரதர் என கமெண்ட் செய்திருந்தார்.

அதற்கு பதிலளித்த விஜயகார்த்திகேயன், ''நன்றி பிரதர், நீ யாரா வேணா இரு, எவனா வேணா இரு. ஆனா எங்கிட்ட கொஞ்சம் தள்ளியே இரு என்று 'சீமராஜா' பட டயலாக்கை கமெண்ட் செய்தார். பின்னர் அதற்கு சிவகார்த்திகேயன், அதற்கு கிரெடிட்ஸ் இயக்குநர் பொன் ராமிற்குத்தான். சமூக விலகலை இரண்டே வரிகளில் சொல்லிவிட்டார்.

கொரோனா - சிவகார்த்திகேயன் பட டயலாக் செம மேட்ச் - சுட்டிக்காட்டிய கலெக்டர் வீடியோ

Entertainment sub editor