கொடூரன் கொரோனா கார்த்தி படத்தையும் விட்டு வைக்கலையாம்.. - தயாரிப்பாளர் அட்வைஸ்

முகப்பு > சினிமா செய்திகள்

By |

கொரோனோவின் தாக்கம் உலக அளவில் பெரிய தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது. கொரோனா வைரஸினால் உயிரிழப்புகள் ஒரு பக்கம் இருக்கும் போது, அதன் காரணமாக ஏற்பட்டுள்ள அச்சம் வணிகம் சார்ந்த விஷயங்களை பெரிதும் பாதித்துள்ளது.

கொரோனா கார்த்தியின் சுல்தான் படத்தின் பாதித்துள்ளதாக எஸ்.ஆர்.பிரபு தெரிவித்துள்ளார் | SR Prabhu reve

குறிப்பாக திரைப்படங்களின் படப்பிடிப்பு, ரிலீஸ் உள்ளிட்ட அம்சங்கள் அதிக பாதிப்புக்குள்ளாகியுள்ளன. இதன் தாக்கம் தமிழ் சினிமாவிலும் எதிரொலித்துள்ளது. அஜய் ஞானமுத்து இயக்கத்தில் விக்ரம், கிரிக்கெட் வீரர் இர்ஃபான் பதான் உள்ளிட்டோர் நடிக்கும் 'கோப்ரா' படத்தின் படப்பிடிப்பும் கொரோனாவினால் தள்ளிப்போகியுள்ளது.

இதன் ஒரு பகுதியாக தயாரிப்பாளர் எஸ்.ஆர்.பிரபு தனது ட்விட்டர் பக்கத்தில், ''கொரோனாவினால் கார்த்தியின் 'சுல்தான்' படத்தின் அப்டேட் தாமதமாகியுள்ளது. பாதுகாப்பாக இருங்க என்று குறிப்பிட்டுள்ளார். 'சுல்தான்' திரைப்படத்தில் கார்த்தி ஜோடியாக ராஷ்மிகா நடிக்க, 'ரெமோ' பட இயக்குநர் பாக்யராஜ் கண்ணன் இயக்கி வருகிறார்.

இந்த படத்துக்கு விவேக் - மெர்வின் இசையமைக்க, சத்யன் சூரியன் ஒளிப்பதிவு செய்கிறார். டிரீம் வாரியர்ஸ் நிறுவனம் சார்பாக இந்த படத்தை எஸ்.ஆர்.பிரகாஷ் பாபு மற்றும் எஸ்.ஆர்.பிரபு இருவரும் இணைந்து தயாரிக்கின்றனர்.

Entertainment sub editor