Jango Others
www.garudabazaar.com

நடிகர் சூர்யா உடன் முதன்முறையாக இணைந்த சிவகார்த்திகேயன்! எதற்கு தெரியுமா?

முகப்பு > சினிமா செய்திகள்

By |

இயக்குனர் பாண்டிராஜ் இயக்கத்தில் சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிக்கும் சூர்யாவின் 40வது திரைப்படம் 'எதற்கும் துணிந்தவன்'.

SivaKarthikeyan penned a song in Etharkum thuninthavan

இந்தப் படத்தின் மையமாக பொள்ளாச்சி பாலியல் வன்கொடுமை சம்பவம் அமைந்திருக்கலாம் என நம்பத்தகுந்த தகவல்கள் தெரிவிக்கின்றன.  சூர்யாவுக்கு ஜோடியாக சிவகார்த்திகேயனுடன் டாக்டர் படத்தின் கதாநாயகி பிரியங்கா அருள்மோகன் நடிக்கிறார். நடிகர் சத்யராஜ் முக்கிய வேடத்தில் இந்த படத்தில் நடிக்கிறார். இந்தப் படத்திற்கு ஒளிப்பதிவாளர் ரத்னவேலு ISC ஒளிப்பதிவு செய்கிறார் இவர் சூர்யா நடித்த 'நந்தா', 'வாரணம் ஆயிரம்' போன்ற படங்களுக்கு ஒளிப்பதிவு செய்தவர்.

SivaKarthikeyan penned a song in Etharkum thuninthavan

இப்படத்தின் வெளியீட்டுத் தேதியை ஒரு பிரத்யேக VIDEO உடன் படக்குழு சார்பாக இன்று அறிவித்துள்ளனர். அதன்படி வரும் 2022 ஆம் ஆண்டு பிப்ரவரி 4 ஆம் தேதி எதற்கும் துணிந்தவன் படம் ரிலீஸ் ஆகிறது. 'விஸ்வாசம்' படத்திற்கு தேசிய விருது வென்ற இசையமைப்பாளர் டி இமான் இந்த படத்திற்கு இசையமைக்கிறார். இந்நிலையில் இந்த படத்தில் சிவகார்த்திக்கேயன் மிக முக்கிய பங்கு வகிப்பது பற்றிய அதிகாரமான தகவல் வெளியாகியுள்ளது.

SivaKarthikeyan penned a song in Etharkum thuninthavan

இந்த படத்தின் பிரத்யேக VIDEO-ல் பாடல் ஆசிரியர்கள் பெயர் வரிசையில் கவிஞர் யுகபாரதி,  நடிகர் சிவகார்த்திகேயன், இயக்குநர் விக்னேஷ் சிவன் ஆகிய மூவரின் பெயர்களும் இடம்பெற்றுள்ளன. எனவே எதற்கும் துணிந்தவன் படத்தில் நடிகர் சிவகார்த்திகேயன் பாடல் எழுதுவது உறுதியாகியுள்ளது.

SivaKarthikeyan penned a song in Etharkum thuninthavan

மேலும் செய்திகள்

தொடர்புடைய இணைப்புகள்

SivaKarthikeyan penned a song in Etharkum thuninthavan

People looking for online information on ET, Pandiraj, Sivakarthikeyan, Suriya will find this news story useful.