www.garudabazaar.com

விஜய் பேரை சொல்லி டிக்கட் வாங்கிட்டு போயிட்டாங்க.., நைட் 2.30 மணிக்கு தளபதிகிட்ட இருந்து கால்..!!

முகப்பு > சினிமா செய்திகள்

By |

நடிகர் விஜய் மற்றும் மாஸ்டர் படத்தின் ரிலீஸ் குறித்து ரோகினி தியேட்டரின் Executive Director ரேவந்த் சரண் மனம் திறந்து பேசியுள்ளார்.

நடிகர் விஜய், மாஸ்டர் பற்றி தியேட்டர் ஓனர் கருத்து | Rohini Theatre Rhevanth Charan opens on Vijay, Master Release

தமிழ் சினிமாவில் முன்னணி ஹீரோவாக வலம் வருபவர் விஜய். இவர் தற்போது லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் மாஸ்டர் திரைப்படத்தில் நடித்துள்ளார். இத்திரைப்படத்தில் விஜய் சேதுபதி, ஆண்ட்ரியா, மாளவிகா மோகனன், ஷாந்தனு உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். ஏப்ரல் மாதம் ரிலீஸ் ஆக வேண்டிய இத்திரைப்படம் லாக்டவுன் காரணமாக தள்ளிவைக்கப்பட்டுள்ளது. 

இந்நிலையில் சென்னையில் அமைந்துள்ள பிரபல ரோகினி தியேட்டரின் Executive Director ரேவந்த் சரண நம்மிடம் பேசிய போது ஒரு சுவாரஸ்யமான சம்பவத்தை பகிர்ந்து கொண்டார். அப்போது அவர் கூறியதாவது, ''ஒரு முறை விஜய் சார் பெயரை சொல்லி சிலர் டிக்கட் வாங்கி சென்றுவிட்டார்கள். அன்று இரவு 2.30 மணிக்கு அவரிடம் இருந்து எனக்கு ஃபோன் வருகிறது. என் பெயரை சொல்லி யார் டிக்கட் கேட்டாலும் அதற்கு முறையான பணம் வாங்கி கொண்டே கொடுக்க வேண்டும், இல்லையென்றால் எனக்கே இதுபற்றி நேரடியாக சொல்லுங்க'' என விஜய் தெரிவித்ததாக ரேவந்த் கூறினார். 

மேலும் மாஸ்டர் படத்தின் ரிலீஸ் குறித்தும், தியேட்டர்களின் எதிர்காலம், OTT  என பல விஷயங்களை பற்றிய இவரின் முழு வீடியோ இதோ. 

விஜய் பேரை சொல்லி டிக்கட் வாங்கிட்டு போயிட்டாங்க.., நைட் 2.30 மணிக்கு தளபதிகிட்ட இருந்து கால்..!! வீடியோ

தொடர்புடைய இணைப்புகள்

நடிகர் விஜய், மாஸ்டர் பற்றி தியேட்டர் ஓனர் கருத்து | Rohini Theatre Rhevanth Charan opens on Vijay, Master Release

People looking for online information on Master, Rhevanth Charan, Rohini theatre, Vijay will find this news story useful.