www.garudabazaar.com

ராஜூ கேட்ட சர்ச்சை கேள்வியைத் தொடர்ந்து.. அபினய் மனைவி பதிவிட்ட ‘வைரல்’ பதிவு! #BiggBossTamil5

முகப்பு > சினிமா செய்திகள்

By |

பிக்பாஸ் நிகழ்ச்சியின் 5வது சீசனை ரம்யா கிருஷ்ணன் தொகுத்து வழங்கிவருகிறார்.

raju question abhinay pavani love viral post from abhinay wife

இந்நிகழ்ச்சியை தொகுத்து வழங்கி வந்த நடிகர் மற்றும் மக்கள் நீதி மய்யம் கட்சித் தலைவர் கமல்ஹாசன் உடல்நிலை குன்றியதால் சிகிச்சை எடுத்துக்கோண்டு வருகிறார்.

அவரது உடல்நலம் தேறிவரும் நிலையில், நடிகை ரம்யா கிருஷ்ணன் பிக்பாஸ் நிகழ்ச்சியை தொகுத்து வழங்கவுள்ளதாக, கமல்ஹாசன் வீடியோ கான்ஃபரன்ஸிங் மூலம் ரம்யா கிருஷ்ணனை பிக்பாஸ் அரங்கத்தில் அறிமுகப்படுத்தி பேசினார்.

இதனைத் தொடர்ந்து ரம்யா கிருஷ்ணன் பல விஷயங்களை பற்றி போட்டியாளர்களிடையே பேசியும் விவாதித்தும் கருத்து கேட்டும் வருகிறார். முன்னதாக அக்‌ஷராவை சிபி மற்றும் ராஜூ திருக்குறள் மனப்பாடம் செய்து சொல்லச் சொல்லி வலியுறுத்தியதற்கு என்ன தண்டனை கொடுக்கலாம் என அக்‌ஷராவிடமே ரம்யா கிருஷ்ணன் கேட்டார்.

இதற்கு அக்‌ஷரா ஆசிரியர்களாக இருந்த அனைவரையும் ஓரிருவு வெளியில் படுக்கச் சொல்லி சொல்லிவிட்டார்.

ஞாயிற்றுக்கிழமை எபிசோடில் இந்த விஷயங்கள் இடம் பெறும் நிலையில், முன்னதாக ட்ரூத் ஆர் டேர் விளையாட்டின்போது, ராஜூ உருட்டிய பாட்டில் அபினய் பக்கம் திரும்பியபோது ராஜூ கேட்ட கேள்வி இன்னும் சர்ச்சையானது. அப்போது ராஜூ துடுக்காக பேசுவது போல அபினய்யிடம், “பாவனிய லவ் பண்றியா.” என கேட்டு பிக்பாஸ் வீட்டையே அதிரவைத்தார்.

அனைவரும் ஒரு கணம் அதிர்ச்சி அடைந்துவிட்டனர். அபினய், ராஜூவை பார்த்து, “என்னடா கேக்குற?” என கடுப்பாக கேட்டார். ஆனால் ராஜூவை இமான், ஐக்கி உள்ளிட்டோர் அழைத்துச் சென்று தனியாக வைத்து, அவ்வாறு கேட்டதற்காக காரணத்தை கேட்டனர்.

அதற்கு பதில் அளித்த ராஜூ, “சிம்பிள். அவர் இல்லை என்றால், இல்லை என்று சொல்லும் ஆப்ஷன் அவருக்கு இருக்கிறது. சங்கடப் படுத்தும் கேள்வியானாலும் அவர் அதை எதிர்கொள்வதுதான் டேர் டாஸ்க்” என்பது போல் விளக்கம் கொடுத்திருந்தார்.

இதனை அடுத்து பிரியங்கா, நிரூப் மற்றும் அபிஷேக் உள்ளிட்டோரிடம் ராஜூ தான் பேசியதை பற்றி கருத்து கேட்டபோது, பிரியங்கா, “நீ பண்ணியது கேவலமான செயல். உனக்கும் திருமணம் ஆகியிருக்கிறது. ஒரு கல்யாணம் ஆனவரை பார்த்து அப்படி கேட்பது அவரை எந்த விதத்தில் பாதிக்கும் என்பது குறித்து உனக்கு தெரியாதா?” என கேட்டார்.

இந்நிலையில், அபிநய் மனைவி, “எப்படி இருந்தாலும் இறுதியில் நீங்க எப்படிபட்ட நபர் என்பது எனக்கு தெரியும். உங்களை பற்றி நான் புரிந்துகொண்டிருக்கும் அளவுக்கு யாருக்கும் புரியாது. எப்போதும் உங்களை காதலிக்கிறேன்!” என்று பதிவிட்டு இருக்கிறார். அபர்ணாவின் இந்த பதிவு அபினயை பார்த்து ராஜூ கேட்ட கேள்வி உட்பட இது தொடர்பான பல பேச்சுகளுக்கு பதிலாக இருக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.

தொடர்புடைய இணைப்புகள்

raju question abhinay pavani love viral post from abhinay wife

People looking for online information on BiggBoss5, Biggbosstamil, BiggBossTamil5, Ramya Krishnan, Ramyakrishnan, RK, Vijay Television, Vijaytv will find this news story useful.